Skip to main content

ஆக்சிஜன் சேமிப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021
Minister MRK Panneerselvam inspects Oxygen Storage Center

 

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆக்ஸிஜன் சேமிப்பு மையத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் ஏற்கனவே 6 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் மையம் இயங்கி கொண்டு வருகிறது என்றும் கூடுதலாக திங்கட்கிழமை 6 ஆயிரம் கிலோ லிட்டர் கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு மையம் இயங்க உள்ளதாகவும் கூறினார்கள்.  இதனைத்தொடர்ந்து மருத்துவர்களிடம் கரோனா  பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் படுக்கையுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்தும்  அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது இந்த மருத்துவமனையில் கூடுதலாக ரூ30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள  6 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் சேமிப்பு மையம் செயல்பட உள்ளது. அது செயல்பட்டால் 250 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி ஏற்படுத்தப்படும். அதேபோல் கடலூர் அரசு மருத்துவமனையிலும் 216 கூடுதல் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் ஆக்சிஜனுடன் கூடிய 600 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பதவியேற்ற ஒரு வாரத்தில் இருந்தே  கரோனாவை கட்டுபடுத்துவதற்கான தொடர்பணியை செய்து வருகிறது. அதனடிப்படையில் முதல்வர், அமைச்சர்களை தொகுதிக்கு சென்று கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார். கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டு நடவடிக்கை குழு உருவாக்கப்பட்டுள்ளது . இந்த அரசு கரோனாவிருந்து அனைவரையும் காப்பாற்றும் பொதுமக்கள் பயம் கொள்ளவேண்டாம்” என தெரிவித்தார்.

 

Minister MRK Panneerselvam inspects Oxygen Storage Center

 

இதேபோல் சிதம்பரம் அருகே உள்ள  சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் கரோனா தொற்று நோயாளிகளை பாதுகாக்கும் வகையில் 400 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையும் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது தொற்று ஏற்பட்டு பாதுகாப்பு மையத்திற்கு வரும்  நோயாளிகளுக்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என அங்குள்ள அலுவலர்களிடமும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். புதிய தொற்று ஏற்பட்டு வரும் நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் எந்தவித இடையூறும் இல்லாமல் உடனடியாக செய்து தர வேண்டும் என அவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், சிதம்பரம் வட்டாட்சியர் ஆனந்த், அண்ணாமலைப்பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ஞானதேவன், மருத்துவகல்லூரி கண்காணிப்பாளர் நிர்மலா, சிதம்பரம் டிஎஸ்பி லாமேக்  உள்ளிட்டவருவாய்த்துறையினர், காவல் துறையினர், மருத்துவர்கள் என உடனிருந்தனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.