Skip to main content

எம்.ஜி.ஆரின் கனவைத் தகர்க்கும் அமைச்சர்கள்! -கோபத்தில் அதிமுகவினர்...

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

Tiruchirappalli

 

இரண்டாவது தலைநகர் மதுரை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியை முன்னிறுத்தும் திட்டங்கள் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே தொடர்கின்றன.

 

திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர்: இனிமேல் கட்டப்படவுள்ள அரசுத் துறை கட்டிடங்கள் அனைத்தும் திருச்சியில் கட்டவேண்டும். தண்ணீர் வசதி, விமான வசதி, ரயில்வே வசதி, இட வசதி என அனைத்தும் திருச்சியில் தாராளமாக உள்ளது. அரசியலை கடந்து பூகோள அமைப்பின் அடிப்படையிலும் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சியை தேர்வு செய்து முதலமைச்சர் பணிகளை தொடங்கினால் மக்கள் வரவேற்பார்கள்.

 

அரசியல் விமர்சகரும் கறுப்புக் குதிரை நூலாசிரியருமான நரேன் ராஜகோபாலன்: திருச்சி நிர்வாக தலைநகரமாகவும், சென்னை தமிழ்நாட்டின் வணிக தலைநகரமாகவும் இருக்கட்டும். திருச்சியிலிருந்து தமிழ்நாட்டின் எந்த மூலைக்கும் ஆறு மணி நேரத்தில் போய்விட முடியும். ஆனால் இன்றைக்கு மதுரையிலிருந்து சென்னைக்கு வருவதற்கே 8 மணி நேரமாகும். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியெல்லாம் கேட்கவே வேண்டியதில்லை. துறைமுகங்களுக்கு பக்கத்தில் தலைநகரங்கள் என்பது பிரிட்டிஷ் அரசு அவர்கள் வசதிக்குச் சொன்னது. அதனால்தான் மெட்ராஸ், பம்பாய், கொல்கத்தா முக்கிய நகரங்களாக இருந்தது. 21 ஆம் நூற்றாண்டில் கடல்வழி வணிகத்தைவிட, இழை வழி வணிகம்தான் அதிகம். அதனால் துறைமுகங்கள் இருக்க வேண்டிய கட்டாயமில்லை.

 

தி.மு.க. முதன்மைச் செயலாளர் நேரு: திருச்சியை இரண்டாவது தலை நகராக்கும் கோரிக்கையை இவர் ஆதரிக்கிறார். வணிகர்கள் மற்றும் பொதுமக்களைக் கூட்டி விரைவில் ஆலோசனை நடத்தவிருப்பதாக, கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தெரிவித்துள்ளார். 'தலைநகர் திருச்சி’ என்ற இயக்கத்தை நடத்திவரும் ஜவகர் ஆறுமுகம் தொடர்ந்து இதனை வலியுறுத்துகிறார்.

 

முன்னாள் எம்.பியும் அ.தி.மு.க மாவட்ட செயலாளருமான குமார்: "திருச்சியை இரண்டாவது தலைநகராக்க விரும்பிய எம்.ஜி.ஆர். இதற்காக நவல்பட்டு கிராமத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் அண்ணா நகர் பகுதியை துணை நகரம் என்ற பெயரில் உருவாக்கினார். கிராமத்தில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டது. 1984ஆம் ஆண்டிலேயே ஐந்தாயிரம் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டமான துணை நகரம் திட்டம் திருச்சி மக்களின் இந்த முதல்வர் மற்றும் துணைமுதல்வரிடம் கோரிக்கையை வைப்போம்'' என்றார்.

 

வெல்லமண்டி நடராஜன்- சுற்றுலாத் துறை அமைச்சர்: "திருச்சியை இரண்டாவது தலைநகராக ஆக்க வேண்டும் என விரும்பிய எம்.ஜி.ஆர் உடல்நலக் குறைவால் மறைந்துவிட்டதால், நிறைவேறாமல் போய்விட்டது. திருச்சியைத்தான் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்'' என்றார் உறுதியாக.

 

தலைநகர் திருச்சி எனும் எம்.ஜி.ஆரின் கனவை அமைச்சர்களே தகர்ப்பது அ.தி.மு.க.வினரை கோபப்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மர்மம் விலகாத மாணவியின் மரணம்! சாலை மறியலில் பெற்றோர்! திருச்சியில் பரபரப்பு!

Published on 20/01/2021 | Edited on 20/01/2021
ddd


திருச்சி சமயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனலெட்சுமி இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லூரியின் மாணவிகள் விடுதியில் ராஜேஸ்வரி என்ற மாணவி மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 


அரியலூர் மாவட்டம் கருப்பூா், பொய்யூா் கிராமத்தை சோ்ந்த விவசாயி ராமையாவின் மகள் ராஜேஸ்வரி இரண்டாம் ஆண்டு இளங்களை பார்மா படிப்பை விடுதியில் தங்கி பயின்று வருகிறார். வழக்கம்போல பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு சென்று வந்த மாணவி ராஜேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை  (17.01.2021) மாலை விடுதிக்கு வந்துள்ளார். 

 

திங்கட்கிழமை செமஸ்டா் தோ்வு என்பதால் 18.01.2021 விடியற்காலை 1 மணி வரை சக தோழிகளுடன் அறையில் அமர்ந்து படித்து வந்துள்ளார். இரவு வெகு நேரம் படித்ததில் அவரோடு படித்து கொண்டிருந்த 7 தோழிகளும் அவா்களுடைய அறைக்கு சென்ற நிலையில், அதன்பிறகு ராஜேஸ்வரிக்கு என்ன நடந்தது என்று அவிழ்க்கப்படாத முடிச்சாக உள்ளது. 

 


திங்கட்கிழமை விடிந்த பிறகு கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்த ராஜேஸ்வரியின் தோழிகள் அவரை அறையில் வந்து தேடி பார்த்துவிட்டு சென்றுள்ளனா். காலை 8.45 மணிக்கு விடுதி கட்டிடத்தின் தரை தளத்தில் காயங்களுடன் கிடப்பதை பார்த்த விடுதி மாணவிகள் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். 


அவா்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் முன்பு அவரை எஸ்.ஆா்.எம். மருத்துவ கல்லூரிக்கு தூக்கி சென்றுள்ளனா். ஆனால் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் கிடைத்த நிலையில், கல்லூரி நிர்வாகம் மாணவி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். 


இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் காவல்துறையினா் பெண்ணின் உடலை நிர்வாகத்திடம் இருந்து கைப்பற்றி திருச்சி ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி ராஜெஸ்வரி இறந்து கிடந்த பகுதியை கல்லூரி நிர்வாகம் கழுவி விட்டிருந்த நிலையில், எந்தவித தடயமும் கிடைக்காமல் காவல்துறை ஒருபக்கம் திணறி வருகிறது. 

 

மற்றொரு பக்கம் கல்லூரி நிர்வாகம் தன்னுடைய பெண்ணை கொன்றுவிட்டதாக புகார் தெரிவித்துள்ள நிலையில், ராஜேஸ்வரியின் பெற்றோர் மற்றும் உறவினா்கள், பெண்ணின் உடற்கூறு பரிசோதனையை தலைமை மருத்துவமனையில் வைத்து செய்ய வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்ததையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் இருந்து திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 


இதற்கிடையில் கல்லூரி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று கல்லூரி நிர்வாகம் முன்பு மறியல் போராட்டத்தில் உறவினா்கள் ஈடுபட்டனா். கல்லூரி நிர்வாகம் ராஜேஸ்வரி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவலை கொடுத்திருந்த நிலையில் பெண்ணின் உடம்பில் எந்தவித எலும்பு முறிவுகளும் ஏற்படாமல் கழுத்து நெறிக்கப்பட்டு, தாடை பகுதியிலும், தொடைப்பகுதியிலும் சில இரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால், பெரிய சந்தேகத்தை காவல்துறைக்கு ஏற்படுத்தி உள்ளது. 

 

எனவே மாணவியின் மரணம்  தற்கொலை அல்ல, கொலை என்ற கோணத்தில் காவல்துறையும் தன்னுடைய விசாரணையை துவங்கியுள்ளது. இரவு 1 மணிக்கு பிறகு என்ன நடந்தது என்பதற்கான எந்தவித சிறிய தடயமும் கிடைக்காததால் விசாரணையில் சற்று தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதற்கு காரணம் பெண்கள் விடுதி என்பதால் கேமராக்கள் பொருத்தப்படாமல் இருப்பது ஒரு முக்கிய காரணம். 

 

மாணவி தரப்பினர் கூறும்போது, மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்று நிர்வாகத்தரப்பில் சொல்வது முரண்பாடான கருத்தாக உள்ளது. எனவே விரைவில் மா்ம முடிச்சுகள் விலகும், காவல்துறை இந்த வழக்கை புதிய கோணத்தில் கையாண்டு குற்றவாளிகளை பிடிக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.

 

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, முதல் சந்தேகம் கல்லூரி நிர்வாகம் எந்தவித தகவலும் காவல்துறைக்கு தெரிவிக்காமல் அவா்களே மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனா். 

 

இரண்டாவது கல்லூரி நிர்வாகம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவா் விழும்போது சுவரை ஒட்டியே விழுந்ததாகவும் கொடுத்த தகவலிலும் ஒரு முரண்பாடு உள்ளது. பொதுவாக மேலிருந்து கீழே குதிக்கும்போது கட்டிடத்தில் இருந்து சில அடி தூரம் தள்ளி விழுவார்கள் ஆனால் நிர்வாகம் சுவரை ஒட்டியே விழுந்ததாக கூறுகின்றனா்.


அதேபோல் மேலிருந்து கீழே வந்து விழும் வேகத்தில் உடம்பில் ஏதாவது ஒரு பகுதியாவது முன் மண்டை பகுதி அல்லது பின் மண்டை பகுதி அடிபடும், ஆனால் இந்த பெண்ணில் தலையில் சிறிய காயம் கூட இல்லை. எனவே இது ஒரு சந்தேகம் ஏற்படுகிறது. எனவே எதுவாக இருந்தாலும் முழுமையான உடற்கூறு ஆய்வு தகவல் அறிக்கை வந்த பிறகு உரிய விசாரணை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பெண்ணின் உறவினா்கள் கல்லூரியினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராம், டிஐஜி ஆனி விஜயா இருவரும் பெற்றோரிடம் பேசி சமாதானம் செய்து வைத்தனர். மருத்துவ அறிக்கை வந்த உடன் கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றம் இருப்பின் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்றும், எனவே இந்த மாணவியின் மரணம் குறித்து விசாரிக்க டிஎஸ்பி தலைமையிலான ஒரு தனிப்படை அமைத்திருக்கிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று மாணவியின் பெற்றோரிடம் உறுதியளித்ததாக கூறினார்கள்.

 

 


 

Next Story

சுவர் ஏறி குதித்து திருட முயற்சி... புரட்டி எடுத்த பொதுமக்கள்... சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு...

Published on 26/12/2020 | Edited on 26/12/2020
ddd

 

திருச்சி அல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் வசித்து வரும் நிலையில் அவருடைய வீட்டில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் 2 வாலிபர்கள் திருடுவதற்காக முயன்று வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளனர். 

 

அதை அறிந்த வெங்கடேசன் சத்தம் போட்டதில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் பிடிக்க முயற்சி செய்தனர். அதில் அரவிந்த் என்பவர் தப்பித்து செல்ல தீபு என்ற வாலிபர் சிக்கினார். இவர்களைக் குறித்து பொதுமக்கள் விசாரித்ததில் அவர்கள் இருவரும் திருவனந்தபுரம் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் தீபு கையில் வைத்திருந்த கத்தியால் பொதுமக்களை மிரட்ட அவர்கள் தீபு வை சரமாறியாக தாக்கியுள்ளனர்.  தாக்கியதில் படுகாயம் அடைந்து தீபுவை பொதுமக்களே திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

 

மேலும் தப்பி சென்ற அரவிந்தை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தீபு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.