Skip to main content

''நானும் சசிகலா புஷ்பாவும் ஒரே கேரக்டர்; பதிலடி தருவேன்'' - காயத்ரி ரகுராம் ஆவேசம்

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

 "Me and Sasikala Pushpa are the same character; I will retaliate'' - Gayathri Raghuram raves

 

இன்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “யூடியூப் சேனல்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நேர்காணல் வழங்கி வரும் சிலர் கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து தங்களது சொந்த கருத்துக்களை முன்னிறுத்தி வருகிறார்கள். கூட்டணிக் கட்சியை பற்றியும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைப் பற்றியும் யூடியூப் சேனல்களில் சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள் கட்சியின் நிலைப்பாடாக மாறுவது ஏற்புடையது அல்ல. அந்தக் காணொளியைக் காணும் மக்களுக்கு இது பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வமான கருத்து மற்றும் கட்சியின் எண்ண ஓட்டம் இதுதான் எங்கிற தவறான பிம்பத்தை மக்களிடம் எடுத்துச் சென்றுவிடுகிறது'' எனக் கூறியிருந்தார்.

 

மேலும் பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் பாஜகவில் வகித்துவரும் பொறுப்புகளிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ச்சியாக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 "Me and Sasikala Pushpa are the same character; I will retaliate'' - Gayathri Raghuram raves

 

இந்நிலையில் காயத்ரி ரகுராம் இன்று கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நான் உண்மையைப் பேசினதுக்காக மட்டும்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு எதுவும் இல்லை. நான் உண்மையைப் பேசி இருந்தேன். என்னைப் பற்றி ஒரு தனிப்பட்ட தாக்குதல் வரும்பொழுது அதற்குப் பதில் சொல்லும் கடமை இருக்கிறது. பாஜக நிர்வாகி செல்வகுமார் என்ற ஒருவர் கொச்சையான டிவிட்டர் பதிவை லைக் செய்துள்ளார். பலமுறை எனக்கு அவரிடமிருந்து கால்கள் வந்தது. அதற்கு நேரடியாக நான் பதிலடி கொடுத்தேன். பதிலடி கொடுத்ததற்காக நீக்கப்பட்டுள்ளேன். தனிநபர் சார்ந்து அது திமுக காரராக இருக்கட்டும், விசிக காரராக இருக்கட்டும், பாஜக காரராக கூட இருக்கட்டும் யார் தாக்கினாலும் அவர்களுக்குத் திரும்ப பதிலடி கொடுக்கத்தான் செய்வேன். இது என்னுடைய உரிமை. இந்த சுதந்திரத்தை முடக்குவது என்பது வருத்தமாக இருக்கிறது. அதுவும் கட்சிக்குக் களங்கம் விளைவித்தேன் என்று சொல்லி என்னை சஸ்பெண்ட் செய்திருப்பது மன வருத்தத்தைத் தருகிறது. மன உளைச்சலையும் தருகிறது.

 

எட்டு வருடமாக இந்தக் கட்சிக்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். என்னுடைய சினிமா பணிகள், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்கட்டும் எதுவுமே இல்லாமல் நான் பாஜகவிற்காக, நாட்டிற்காக ஐந்து பைசா கூட வாங்காமல் என்னுடைய சொந்த காசில் அல்லது கடன் வாங்கியாவது மத்தவங்களுக்கு உதவி செய்துகொண்டு வந்திருக்கிறேன். அதற்கு நிறைய உதாரணம் இருக்கிறது; உண்மையும் இருக்கிறது. அதற்கு சாட்சியம் இருக்கிறார்கள். கரோனா காலகட்டத்திலும் சரி, இப்பொழுதும் சரி மக்களுக்காக நான் நிறைய செய்து கொண்டிருக்கிறேன். எங்கள் ஃபேமிலிக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. யாருக்காக இருந்தாலும் சரி. நடனக் கலைஞர்களுக்குக் கூட உதவிகள் எல்லாம் பண்ணி இருக்கிறோம்.

 

வெளிநாடு மற்றும் அண்டை மாநிலத் தமிழர் பிரிவில் பணியாற்றி இதுவரை நான் வெளிநாட்டிலிருந்து 28 பேரை இங்குப் பத்திரமாகக் கொண்டு வந்திருக்கிறேன். மியான்மர், கம்போடியா, துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நிறைய பேரை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். இப்படி ஏகப்பட்ட விஷயங்களை என்னுடைய சொந்த செலவில் கூட நான் செய்து கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கும் பொழுது நான் பாஜகவிற்கு களங்கத்தைக் கொண்டு வந்தேன் என்று சொல்வது ரொம்ப வருத்தத்தைத் தருகிறது. செல்வகுமார் என்ற நபர் அதுவும் கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கு முன்புதான் பாஜகவில் சேர்ந்த நபர் வந்த உடனே கட்சியில் பெரிய பொறுப்பை வாங்கி இன்னைக்கு அவர் எனக்கு எதிராக, கொச்சையான டிவிட்டுட்டு லைக் போட்டிருக்கிறார். அதைப் பார்த்துக்கொண்டு நான் சும்மா இருக்கமாட்டேன். நான் பத்திரமாகத்தான் இருக்கிறேன். என்னை யாராவது தாக்கினார்கள் என்றால் திருப்பி அடிக்கிற கேரக்டர். சசிகலா புஷ்பாவும் அப்படித்தான் திருப்பி அடிக்கிற கேரக்டர். இதுக்கும் கட்சி களங்கத்திற்கும் சம்பந்தமே கிடையாது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.