Skip to main content

'அமைச்சர் பதவிகேட்டு கூட்டணிக்கு வந்துவிடாதீர்கள்'-கே.பி.முனுசாமியின் பேச்சு பாஜகவுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியா?

Published on 27/12/2020 | Edited on 27/12/2020

 

KP Munuswamy's speech an end to the BJP?

 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை தற்போதே தமிழக அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. அதிமுக தலைமையும் அதற்கான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வந்த நிலையில், இன்று ராயப்பேட்டையில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கியது அதிமுக தலைமை.

 

அதிமுக தலைமை ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கும் நிலையில், தமிழக பாஜக தலைமையோ பாஜக மேலிடம்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று தொடர்ந்து கூறி வருகிறது. அண்மையில் சென்னையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையிலேயே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அதிமுக-பாஜக கூட்டணியை மேடையிலேயே உறுதிப்படுத்தியிருந்தனர்.  

 

KP Munuswamy's speech an end to the BJP?

 

அதனைத் தொடர்ந்தும் மேலிடம்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என தமிழக பாஜக தலைமை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. அதேபோல் அண்மையில் சிவகங்கையில் வேளாண் சட்டங்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை சிவகங்கையின் சட்டமன்றத் தொகுதிகளை பாஜக கைகாட்டும் ஒருவருக்கு கொடுங்கள் 2021-ஆம் ஆண்டு தேர்தலில் ஹெச்.ராஜாவை சட்டமன்ற உறுப்பினராக்குவோம், அமைச்சராக்குவோம் எனக் கூறியிருந்தார்.

 

KP Munuswamy's speech an end to the BJP?

 

இச்சூழலில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கடந்த 50 ஆண்டு காலமாக எந்த தேசியக் கட்சியும் தமிழகத்தில் உள்ளே வரவிடாமல் திராவிட இயக்கம் தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இப்பொழுது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழைய முயற்சிக்கின்றன சில அரசியல் கட்சிகள். சிலர் சொல்லுகிறார்கள் திராவிட இயக்க ஆட்சியிலே இந்த நாட்டை சீரழித்து விட்டார்கள் என்று. யார் சொல்வது, சில தேசியக் கட்சிகள் சொல்கிறது. சில சந்தர்ப்ப வாதிகள் சொல்கிறார்கள். உயர் நிலையிலிருந்து நீண்டகாலமாக, தந்தை பெரியார் காலத்திலிருந்தே இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்ற ஒரு சமூகம், ஒரு கூட்டம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதிமுக தலைமையில் தான் ஆட்சி. இதிலே கூட்டணி ஆட்சி என்பதற்கு பொருளும் இல்லை தேவையும் இல்லை.

 

கூட்டணி அமைப்போம், கூட்டணி மந்திரிசபை அமைப்போம் என்று எந்த அரசியல் கட்சியாவது நம்மோடு கூட்டணி வந்தால் அவர்கள் தயவு செய்து சிந்தித்துக் கொள்ளுங்கள் என்றார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது கவனத்தைப் பெற்றுள்ளது. 

 

KP Munuswamy's speech an end to the BJP?

 

சிதம்பரத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்பொழுது கே.பி.முனுசாமியின் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அந்தந்த கட்சிகள் தங்களுடைய கட்சிக்கு பலம் அதிகமாகும், தொண்டர்கள் உற்சாகமாவார்கள் என்ற அடிப்படையில் கருத்துகளை சொல்வது வழக்கம். அந்த வழக்கித்தின் அடிப்படையில் பேசி இருந்தால் அதை குற்றம் சொல்ல மாட்டேன். அது அவர்களுடைய கட்சியை பொறுத்த விஷயம் என்றார்.

 

அதிமுக தலைமை தேர்ந்தெடுத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரா அல்லது தமிழக பாஜக சொல்லும்படி பாஜக மேலிடம் கைகாட்டும் நபர்தான் முதல்வர் வேட்பாளரா என்ற கேள்விகள் தொடர்ந்து வந்த நிலையில், அதிமுக தலைமை அறிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர், அமைச்சர் பதவி கேட்டு கூட்டணிக்கு வந்து விடாதீர்கள் என்பதுபோல் கே.பி.முனுசாமி பேசியுள்ளது பாஜகவின் கூட்டணிக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியே என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.