Skip to main content

மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் அது அறவழி போராட்டமாக இருக்காது - வைகோ ஆவேசம்

Published on 30/04/2018 | Edited on 30/04/2018
vaiko sp

 

கடந்த 17ம் தேியன்று நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டை மூடுகிற வரை ஒயமாட்டேன். மக்களின் உயிர் மூச்சுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஸ்டெர்லைட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்று வைகோ தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் உள்ள நகரங்களுக்கு வாகன பரப்புரையை மேற்கொண்டு மக்களைத் திரட்டி வருகிறார். அவரது பரப்புரையை பா.ஜ.க.வினர் வெளிப்படையாகவே எதிர்த்தனர். கடந்த 22ம் தேதியன்று வைகோவின் வாகன பரப்புரை  முடிந்து 28 அன்றுத் தூத்துக்குடியின் வி.வி.டி சிக்னல் அருகே பொதுக்கூட்டம். அதில் பேசிய வைகோவின் பேச்சில் அனல் தெறித்தது.

 

திரளாகத் திரண்ட கூட்டத்தில் வைகோவின் உரைவீச்சு :

உயிர்க் கொல்லி ஆலையான ஸ்ர்டெர்லைட்டை மூட வேண்டும் என்பது என்னுடைய  வாழ்க்கையின் லட்சியம். அந்த ஆலை ஆரம்பத்தில் மகாராஷ்ட்ராவில் தொடங்கப்பட்ட போது அந்த மக்கள் ஒன்று திரண்டு வந்து அடித்து உடைத்தார்கள்.  அப்போதைய மாநில முதல்வர் சரத்பவார், அந்த மக்களை ஒன்றும் செய்யக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பிறகே ஆலையின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார் சரத்பவார் அவர் தான் முதல்வர். பின்னர் குஜராத்திற்குப் போன ஸ்டெர்லைட்டிற்கு அங்கே லைசென்ஸ் வழங்க மறுத்து விட்டார்கள். அங்கே இங்கே சுற்றி தமிழகத்திற்கு வந்த ஸ்டெர்லைட்டிற்குப் பத்தே நாட்களில் லைசென்ஸ் வழங்கிவிட்டார். முதல்வர் ஜெயலலிதா ஆலையைத் துவங்குவதற்கான அத்தனை விதிகளையும் காலில் போட்டு மிதித்து விட்டனர்.

 

vaiko sp

 

ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி நான் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தேன். அப்போது உளவுத்துறை வைகோவின் வழக்கு காரணமாக ஸ்டெர்லைட் மூடப்பட உத்தரவிடலாம் என்று ஜெயலலிதாவிடம் சொன்னது. ஆனால் ஜெ மிகுந்த புத்திசாலி. ஆலை மூடப்பட்டால் வைகோவுக்கும், ம.தி.மு.க.வுக்கும் பெயர் வந்து விடுமே என்று மார்ச் 30 அன்று நாங்கள் ஸ்டெர்லைட்டிற்கான கரண்ட், தண்ணீர் கனெக்ஷ்னை கட் பண்ணி விட்டோம். என்று அறிவித்தார். இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் தெரிவித்தனர். தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்கள். ஆனால் ஏப் 02 அன்று, ஸ்டெர்லைட் ஆலையின் உற்பத்தி நாட்டுக்கு அவசியம். அதை நடத்தலாம். ஆனால் அவர்கள் நூறு கோடி டெபாசிட் செய்ய வேண்டும். பின்னாளில் இந்த ஆலை சுற்றுபுறச்சூழலுக்குத் தடையாக இருந்தால் இந்தத் தீர்ப்பு அதற்குத் தடையாக இருக்காது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தது என்னை அதிர வைத்து விட்டது என் நம்பிக்கை போய்விட்டது. அப்போது கூட  நான் ஆலைக்கெதிரான மக்களின் உணர்வுகளை ஒப்பன் கோர்ட்டில் வெளிப்படுத்தினேன்.

 

இப்போது ஆலை விரிவாக்கம் செய்யப்படுவதை எதிர்த்து பொது மக்கள் போராடத் தொடங்கி விட்டார்கள். கொந்தாளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது இளைஞர்கள், வணிகர்கள் என்று மக்கள் எந்தவிதமான அரசியல் பின்னணியுமில்லாமல் போராடி வருகிறார்ககள். அதன் காரணமாகத்தான் ஆலையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த அரசின் துணையுடன் ஆலையை மீண்டும் திறக்க நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எனவேதான் நான் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளேன். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை நான் ஒயமாட்டேன். இளைஞர்கள் படை என் தலைமையில் திரளும் மீண்டும் ஆலை திறக்கப்பட்டால் அது அறவழி போராட்டமாக இருக்காது என்று அழுத்தம் கொடுத்துப் பேசினார் வைகோ.

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.