Skip to main content

இட்லி, ஆனியன் ஊத்தாப்பம்.. ரசித்து சாப்பிட்ட அமித்ஷா..!

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

Idli, onion Dosa.. Amitsha enjoyed tamilnadu food


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியின் பாஜக சட்டமன்ற வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் நேற்று (01.04.2021) பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக வேலாயுதம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியின் முன்புறம் உள்ள சாலையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை நொய்யல் வழியாக சுமார் 1 கி.மீட்டர் தூரம் பிரச்சார வாகனத்தில் ஊர்வலமாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

சாலையின் இரு புறங்களில் இருந்தும் அமித்ஷாவிற்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அமித்ஷா பிரச்சார வேனில் இருந்து பேசினார். அப்போது அவர், “அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக அண்ணாமலையை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்திலும் நேர்மையான அதிகாரி அண்ணாமலை. தமிழகத்தின் வளர்ச்சி வேண்டுமா? உதயநிதியின் வளர்ச்சி வேண்டுமா? 

 

உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரே ஒரு ஆசை, மு.க.ஸ்டாலினை முதல்வராக்கிப் பார்ப்பதுதான். ஆகவே மக்களே, நீங்களே சொல்லுங்கள், தமிழகத்தில் ஊழல் செய்த காங்கிரஸ், திமுக உள்ளது. ஊழல் செய்யாத பாஜக உள்ளது. வாக்கு இயந்திரத்தில் தாமரை சின்னத்தில் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்கு ரூ. 1,60,000 கோடியை மோடி வழங்கியுள்ளார். தமிழகத்தின் வளர்ச்சியை பாஜக, அதிமுக, பாமக கூட்டணியைத் தவிர வேறு யாராலும் தர முடியாது” என்று பேசினார். 

 

இந்த நிகழ்ச்சியில் அதிமுக கரூர் வேட்பாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உடனிருந்தனர். 

 

Idli, onion Dosa.. Amitsha enjoyed tamilnadu food

 

பிரச்சாரத்தை முடித்து புறப்பட்ட அமித்ஷா, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள தன்னுடைய கட்சித் தொண்டரின் சாலையோர உணவகத்தில் அமர்ந்து, தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி சாம்பார், ஆனியன் ஊத்தாப்பம் உள்ளிட்டவற்றை ரசித்து சாப்பிட்டார். அதன்பின் அங்கிருந்து புறப்படுகையில் அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் பலர், அவரிடம் ஆட்டோகிராஃப் பெற்றுக்கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.