Skip to main content

‘கனத்த இதயத்துடன் தேமுதிகவிலிருந்து வெளியேறுகிறேன்’ - முகநூலில் பதிவிட்ட தேமுதிக பிரமுகர்!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

‘I leave DMDK with a heavy heart’- DMDK politician posted on Facebook

 

நடந்து முடிந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் அமமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக வேட்பாளர்கள் முழுமையாக தோல்வியைச் சந்தித்தனர். கட்சியின் நிறுவனத் தலைவரான விஜயகாந்த், உடல்நிலை காரணமாக கட்சியைத் தொடர்ந்து வழிநடத்த முடியாத நிலையில், கட்சிப் பொறுப்பை முழுமையாக அவரது மனைவி பிரேமலதா கையில் எடுக்கத் துவங்கினார்.  

 

தற்போது கட்சியின் முழு பணிகளையும் அவர் செய்துவரும் நிலையில், கட்சியின் நிலையை அறிந்துகொண்டு நிர்வாகிகள் ஒவ்வொருவராக கட்சியைவிட்டு விலக ஆரம்பித்துள்ளனர். அதில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான கிருஷ்ணகோபால், நடந்து முடிந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இவர், கடந்த 2016ஆம் ஆண்டும் தேமுதிக தலைமையிலான மக்கள்நல கூட்டணியில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அதிலும் தோல்வியைச் சந்தித்தார். இந்நிலையில், அவர் இன்று (15.10.2021) தன்னுடைய முகநூல் பக்கத்தில் கட்சியிலிருந்து தான் விலகுவதாக பதிவிட்டுள்ளார்.

 

‘I leave DMDK with a heavy heart’- DMDK politician posted on Facebook

 

அந்தப் பதிவில், ‘கனத்த இதயத்துடன் தேமுதிகவிலிருந்து வெளியேறுகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. மேலும் அந்தப் பதிவில், ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான பற்றால் தேமுதிகவில் இணைந்து செயல்பட்டுவந்தேன். இதுநாள்வரை கட்சியை ஒருபோதும் குறை கூறியதில்லை; இனிமேலும் நான் கூறப்போவதில்லை. நான் விலகுவதாக அந்த அறிவிப்பு வெளியிட்டவுடன் பலர் என்னைத் தொடர்புகொண்டனர். இருப்பினும் நான் என்னுடைய முடிவில் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன்’ என்று தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

ads

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.