Skip to main content

‘கனத்த இதயத்துடன் தேமுதிகவிலிருந்து வெளியேறுகிறேன்’ - முகநூலில் பதிவிட்ட தேமுதிக பிரமுகர்!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

‘I leave DMDK with a heavy heart’- DMDK politician posted on Facebook

 

நடந்து முடிந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் அமமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக வேட்பாளர்கள் முழுமையாக தோல்வியைச் சந்தித்தனர். கட்சியின் நிறுவனத் தலைவரான விஜயகாந்த், உடல்நிலை காரணமாக கட்சியைத் தொடர்ந்து வழிநடத்த முடியாத நிலையில், கட்சிப் பொறுப்பை முழுமையாக அவரது மனைவி பிரேமலதா கையில் எடுக்கத் துவங்கினார்.  

 

தற்போது கட்சியின் முழு பணிகளையும் அவர் செய்துவரும் நிலையில், கட்சியின் நிலையை அறிந்துகொண்டு நிர்வாகிகள் ஒவ்வொருவராக கட்சியைவிட்டு விலக ஆரம்பித்துள்ளனர். அதில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான கிருஷ்ணகோபால், நடந்து முடிந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இவர், கடந்த 2016ஆம் ஆண்டும் தேமுதிக தலைமையிலான மக்கள்நல கூட்டணியில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அதிலும் தோல்வியைச் சந்தித்தார். இந்நிலையில், அவர் இன்று (15.10.2021) தன்னுடைய முகநூல் பக்கத்தில் கட்சியிலிருந்து தான் விலகுவதாக பதிவிட்டுள்ளார்.

 

‘I leave DMDK with a heavy heart’- DMDK politician posted on Facebook

 

அந்தப் பதிவில், ‘கனத்த இதயத்துடன் தேமுதிகவிலிருந்து வெளியேறுகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. மேலும் அந்தப் பதிவில், ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான பற்றால் தேமுதிகவில் இணைந்து செயல்பட்டுவந்தேன். இதுநாள்வரை கட்சியை ஒருபோதும் குறை கூறியதில்லை; இனிமேலும் நான் கூறப்போவதில்லை. நான் விலகுவதாக அந்த அறிவிப்பு வெளியிட்டவுடன் பலர் என்னைத் தொடர்புகொண்டனர். இருப்பினும் நான் என்னுடைய முடிவில் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன்’ என்று தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

ads

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.