Skip to main content

எனது அறிவை இளைஞர்களுக்கு கொடுக்கவே அரசியலுக்கு வந்தேன் - ரா.அர்ஜுனமூர்த்தி 

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

ra.arjunamurthy

 

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் ரா. அர்ஜுனமூர்த்தி தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். 

 

தமிழக பாஜக கட்சியில் அறிவு சார் பிரிவின் மாநில தலைவராக செயல் பட்டவர் ரா.அர்ஜுனமூர்த்தி. பாஜகவில் இருந்த அர்ஜுனமூர்த்தி ரஜினிகாந்த் கட்சி தொடங்க உள்ளார் என்ற பேச்சுவார்த்தை தொடர்ந்த நிலையில் பாஜகவில் இருந்து பிரிந்து ரஜினியுடன் இணைந்தார். ஆனால் கட்சி தொடங்காமல் ரஜினிகாந்த் பின் வாங்கிய நிலையில் இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். இதற்கிடையே இன்று  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவுடன் இணைந்தார். 

 

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "அர்ஜுனமூர்த்தி இன்று பாஜகவுடன் தன்னை இணைத்துக்கொள்கிறார். இதற்கு முன் பாஜகவில் பயணம் செய்தவர். கட்சியின் அறிவுசார் பிரிவில் மாநில தலைவராக இருந்தவர். பாரதிய ஜனதாவின் கொள்கையை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் அவர்களுக்கு முழு அனுமதி இருக்கிறது. குறுகிய மனப்பான்மை எப்பொழுதும் பாரதிய ஜனதாவுக்கு கிடையாது. நம்முடைய சித்தாந்தம் மற்றும் என்ன அரசியலில் யார் இருந்தாலும் அவர்கள் பாரதிய ஜனதாவுடன் இணைந்து பயணிக்க  பாஜக எப்பொழுதும் விரும்பும். அர்ஜுனமூர்த்தி பாரதிய ஜனதாவில் இருந்து பிரிந்து சென்றாலும் மீண்டும் நம்முடன் இணைய வந்திருக்கிறார். அவரை மகிழ்ச்சியுடன் பாரதிய ஜனதா வரவேற்கிறது" என கூறினார் .

 

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜுனமூர்த்தி "பாரதிய ஜனதா கட்சியில் பதவிக்காக சேரவில்லை. இளைஞர்களுக்கு   நமது அறிவை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்தேன். ரஜினி அரசியல் பயணம் தொடங்கி இருந்தால் அதை  தமிழகத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தது.அதையும் தாண்டி ஆன்மிக அரசியல் இருந்தது. அதே போல் தற்போதும் ஆன்மிக அரசியலுக்காக பாஜகவில் இணைத்துள்ளேன்" என்று கூறினார்.   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.