Skip to main content

''நான்தான் அமைச்சர்'' - மே 2ஆம் தேதி வரை காத்திருக்க முடியாத வேட்பாளா்கள்

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

ddd

 

தேர்தல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், மக்களின் தோ்வு யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு நாம் மே 2ஆம் தேதிவரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதிமுக, திமுக கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியாத நிலையில்,  தோ்தல் முடிந்த ஓரிரு நாட்களிலேயே நான் வெற்றி பெற்றால் மீண்டும் அமைச்சராகிவிடுவேன் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

 

அதிலும், அதிமுக முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன், ''நான்தான் அடுத்த அமைச்சரும், திருச்சி மாநகா் மாவட்டச் செயலாளரும்'' என்று கூறிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். “மேலிடம் எந்தத் துறையைக் கொடுத்தாலும் நான் அதை சிறப்பாக செய்வேன். நான் எதையும் வற்புறுத்தி வாங்க மாட்டேன்” என்று இவருடைய பங்கிற்கு கூறி வருகிறார். அடுத்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ப.குமார், ''நான் வெற்றிபெற்றால் நிச்சயம் எனக்கு பொதுப்பணித்துறை வரும், நான் அமைச்சர் ஆகிவிடுவேன்'' என்று கூறி வருகிறார். 

 

அதிமுக நிர்வாகிகள்தான்அப்படி என்றால், திமுகவும் அப்படித்தான். எப்போதும் அமைச்சராக இருக்க வேண்டும் என்று விரும்பும் கே.என்.நேரு, தன்னுடைய தொகுதியில் திமுகவில் அவர்தான் அமைச்சர் என்ற மனநிலையை அவருடைய தொண்டா்கள் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனா். அண்ணன் அடுத்த உள்ளாட்சித்துறை அமைச்சர் என்று தற்போது பேச ஆரம்பித்துவிட்டனா். அதை கேட்டும் கேட்காதது போல கே.என்.நேரு இருந்தாலும், அவருக்குள்ளும் இந்த ஆசை இருப்பதை தொண்டா்கள் பிரதிபலித்து வருகின்றனா்.

 

இவா்கள் ஒருபக்கம் இருந்தாலும், அமமுக வேட்பாளா் மனோகரன், “நான் வெற்றிபெற்றால் நான்தான் அடுத்த மாநகா் மாவட்டக் கழகச் செயலாளா்” என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளார். தோ்தல் நடந்து முடிந்து ஓரிரு நாட்கள் ஆன நிலையில், யார் அமைச்சர் ஆவார்கள்? அவா்கள் எந்த துறைக்கு அமைச்சர் ஆவார்கள்? என்ற இந்த பேச்சு தொண்டா்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. 

 

ஒவ்வொருவரும் அவா்கள் சார்ந்திருக்கும் ஆதரவாளருக்கு சாதகமாக இருந்தாலும், பொதுமக்களும், நடுநிலையாளா்களும் இந்தப் பிரச்சாரத்தை நகைச்சுவையாக பார்க்கின்றனா். வாக்குப்பதிவின் முடிவுகள் வெளிவராத நிலையில், அதற்குள் எந்த துறைக்கு எந்த அமைச்சர் என்று பேசுவது கேலிகூத்தாக உள்ளதாக பொதுமக்கள் முணுமுணுத்து வருகின்றனா்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.