Skip to main content

“ஆளுநர் இப்படி செய்வது ஏன் என எனக்கும் புரியவில்லை”- அன்புமணி ராமதாஸ்

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

"I also don't understand why the governor is doing this" - Anbumani Ramadoss

 

மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சார்ந்த ஆட்சியில் ஆளுநர் ஜனாதிபதி ஆகியோர் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இருக்கிறதா எனத் தெரியவில்லை என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

 

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்றுய் செய்தியளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆளுநர், ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டம் கொண்டு வந்ததுக்கு கையெழுத்திட்டார். ஆனால் சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதிற்கு இன்னும் கையெழுத்து இடவில்லை. ஏன் என எனக்கு புரியவில்லை. ஆளுநர் கால தாமதம் செய்யாமல் இன்றே அதற்கு கையெழுத்து இட வேண்டும். 

 

லட்சக்கணக்கான குடும்பங்களை ஆளுநர் காப்பாற்ற வேண்டும். இது தமிழ்நாட்டு மக்கள் பிரச்சனை. அதே நேரத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசிற்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சார்ந்த ஆட்சியில் ஆளுநர் ஜனாதிபதி ஆகியோர் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இருக்கிறதா எனத் தெரியவில்லை. 

 

2026ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம். அதற்கான வியூகங்களை 2024ல் அமைப்போம்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வன்மையாக கண்டிக்கிறேன்” - மறுப்பு தெரிவித்த தங்கர் பச்சான்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
thankar bacchan election candidate issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. 

அந்த வகையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க இடம் பெற்ற நிலையில், அக்கட்சியில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி கடலூர் தொகுதியில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.  இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அதே வேளையில் அவர் போட்டியிடவில்லை என ஒரு தகவல் உலா வந்தது.

இந்த நிலையில், அத்தகவல் குறித்து தங்கர் பச்சான் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச் செய்தியை வெளியிட்டவர்கள் யார் எனக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்” என்றார்.  

Next Story

வெளியான பா.ம.க. வேட்பாளர் பட்டியல்; இடம் பெற்ற திரைப்பட இயக்குநர்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Release of pmk Candidate List

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து பாஜக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட அணியமாகி வருகிறது. இந்தநிலையில் பாஜக கூட்டணியில் பாமக, தான் போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அதன்படி, அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - அரசாங்கம், விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்திற்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.