Skip to main content

“இது ஒரு வரலாற்று வெற்றி” - பிரியங்கா காந்தி!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
This is a historic victory Priyanka Gandhi

உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற கட்சியின் பாராட்டு விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் வந்தனர். மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு இருவரும் ரேபரேலிக்கு வருவது இதுவே முதல் முறை என்பதால் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “எங்களை வெற்றிபெறச் செய்த அனைத்து தலைவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும், அமேதி மற்றும் ரேபரேலி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறை அமேதி, ரேபரேலியில் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாகப் போராடியது. உத்தரப்பிரதேசம் மற்றும் நாடு முழுவதும் நான் சமாஜ்வாதி கட்சிக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால் இந்த முறை சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் தேர்தலில் ஒற்றுமையாகப் போராடினார்கள். 

This is a historic victory Priyanka Gandhi

அமேதியில் கிஷோரி லால் சர்மாவையும், ரேபரேலியில் என்னையும், உத்தரப்பிரதேசத்தில் இந்தியக் கூட்டணி எம்.பி.க்களையும் வெற்றி பெறச் செய்தீர்கள். இதன் மூலம் அரசியலை மாற்றிவிட்டீர்கள். ஒட்டுமொத்த நாடும் அரசியல் சாசனத்தைத் தொட்டால் மக்கள் என்ன செய்வார்கள் என்று பாருங்கள் என்று நாட்டின் பிரதமருக்குப் பொதுமக்கள் செய்தி அனுப்பியுள்ளனர். பாஜக வேட்பாளர் அயோத்தி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். என் சகோதரி (பிரியங்கா காந்தி) வாரணாசியில் போட்டியிட்டு இருந்தால் பிரதமர் வாரணாசி தேர்தலில் 2 இலிருந்து 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருப்பார்” எனத் தெரிவித்தார். 

This is a historic victory Priyanka Gandhi

இந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசுகையில், “இது ஒரு வரலாற்று வெற்றி. நாட்டில் தூய்மையான அரசியல் வேண்டும் என்று நீங்கள் அனைவரும் தேசம் முழுவதும் செய்தியை அனுப்பியதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முடிவுக்காக நாங்கள் இரவும் பகலும் உழைத்தோம். எனது சகோதரரை வெற்றிபெறச் செய்த ரேபரேலி மக்களுக்கு நன்றி. நீங்கள் எங்களுக்காகக் காட்டிய உற்சாகத்துடன் நாங்கள் உங்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவோம்” எனத் தெரிவித்தார். இந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு தொகுதி மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் தேர்வுத்தாள் கசிவு மையமாக மாறிவிட்டன” - ராகுல் காந்தி விமர்சனம்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
 Rahul Gandhi criticized BJP-ruled states have become exam paper leak center

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீட் தேர்வில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைந்த விவகாரத்தில் நரேந்திர மோடி வழக்கம்போல் மவுனம் சாதித்து வருகிறார்.

பீகார், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட கைதுகள் மூலம் தேர்வில் திட்டமிட்ட முறையில் ஊழல் நடந்திருப்பதையும், இந்த பாஜக ஆளும் மாநிலங்களில், தேர்வுத்தாள் கசிவின் மையமாக மாறியுள்ளதையும் தெளிவாகக் காட்டுகிறது. நமது நீதித்துறையில், வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறோம். எதிர்க்கட்சிகளின் பொறுப்பை நிறைவேற்றும் அதே வேளையில், இளைஞர்களின் குரலை வீதிகளில் இருந்து பாராளுமன்றம் வரை வலுவாக எழுப்பி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து இதுபோன்ற கடுமையான கொள்கைகளை வகுக்க உறுதி அளித்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

இன்ஸ்டாகிராமில் பழகிய நபரை தேடிச் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
That happened to the young woman who went looking for a person she met on Instagram!

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரைச் சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்கள் ஆன்லைனில் நண்பர்களாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையில், அந்த நபர் தான் ஒரு வங்கியில் பணியாற்றுகிறேன் என்றும் அந்த இளம்பெண்ணுக்கு வங்கியில் வேலை வாங்கி தருகிறேன் என்றும் கூறி உதவ முன்வந்துள்ளார்.  

அதன் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தின் தனபவன் பகுதிக்கு நேரில் வந்து சந்தித்தால் தான் வேலை வாங்கி தர முடியும் என்று அந்த நபர் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பகுதிக்கு இளம்பெண் சென்று அந்த நபரைச் சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்னர், அந்த இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்து குளிர்பானம் ஒன்றைக் குடிக்க வைத்திருக்கிறார். 

இதனையடுத்து, அந்த பெண்ணை ஷாம்லி மாவட்டத்தில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்று அழைத்து சென்று அந்த நபரும் மற்றும் அவருடைய நண்பரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் மூலம் பழகிய நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.