Skip to main content

“திமுகவை தட்டிக்கேட்கும் ஆள்தான் ஆளுநர்” - எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

 'Governor is the person who knocks DMK' - Edappadi Palaniswami interview

 

சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அதன்பிறகு அவரது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், '' டெண்டர் முறைகேடு நடந்துள்ளது. எல்லோரும் ஒப்பந்தம் விடுவார்கள் ஒப்பந்தம் விட்ட பிறகு பணியைத் தொடங்குவார்கள். பணி முடிந்த பிறகு பில் வாங்குவார்கள். ஆனால் இந்த ஆட்சியில் அப்படி இல்லை ஒப்பந்தம் பெற்றவுடனே பணி செய்யாமலேயே பில்லை வாங்குகிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இந்த ஆட்சியில் ஊழல் நடைபெறுவதற்கு இதுவே பெரிய சான்று. கரூரில் நடந்துள்ளது. ஒருசில அதிகாரிகளை மட்டும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். அதிகாரிகள் மூலமாக மட்டும் இது நடக்காது. யாரோ ஒரு அதிகார மிக்கவருடைய ஆணையின் பெயரில்தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கும் என்பதைத் தவிர மற்றபடி சாலை அமைக்காமல் பில் கொடுக்க மாட்டார்கள்.

 

டாஸ்மாக் முறைகேடு பற்றி கேட்க வேண்டிய அவசியமே இல்லை. 24 மணி நேரமும் பார் இருக்கிறது. நீங்களே போய் பாருங்கள் நான் சொல்வது சரியா தவறா என்று, 24 மணி நேரமும் பாரில் மதுபானம் விற்கிறார்கள். அதேபோல் இல்லீகலாக நிறைய பார்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கலால் வரி செலுத்தாமல் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற மதுபானங்களைக் கொண்டு வந்து விற்கிறார்கள். இதனால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் இழக்கிறது. இப்படி மதுபானத்தில் மிகப்பெரிய கொள்ளை நடக்கிறது. அதையும் விசாரிக்க வேண்டும் இதில் கணக்கே தெரியாது.

 

அதேபோல் ஆன்லைன் ரம்மி தொடர்பான தடைச் சட்டத்தை ஆளுநர் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஆளுநரின் செயல்பாடு நன்றாகத்தான் இருக்கிறது. திமுக செய்கின்ற இப்படியான பெரிய ஊழல்களைத் தட்டி கேட்க ஒரு ஆள் வேண்டும் அல்லவா அந்த ஆள் ஆளுநர்தான். அவர்தான் தட்டிக் கேட்க வேண்டும். பிரதான எதிர்க்கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் நடைபெறக்கூடிய அட்டூழியங்கள், மிகப்பெரிய ஊழல்களை நாங்கள்தான் ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம்; அவர்தான் விசாரிக்க வேண்டும். அப்படி விசாரிக்கப்படும் பொழுது ஆளுநர் விமர்சிக்கப்படுகிறார்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.