Skip to main content

“பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலில் சகுனி..” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published on 19/03/2023 | Edited on 19/03/2023

 

Ex Minister Jeyakumar addressed press and comment about ops and panruti ramachandran

 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, நேற்று சனிக்கிழமை இ.பி.எஸ். மனு தாக்கல் செய்துள்ளார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என சொல்லப்பட்டுவந்தது. இந்நிலையில், நேற்று சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., சார்பில் ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணை வரவுள்ளது. 

 

இந்நிலையில், இ.பி.எஸ். அணி சார்பிலிருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (19ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஓ.பி.எஸ்., பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரின் பேட்டியை விரக்தியின் உச்சமாகத்தான் நான் பார்க்கிறேன். ஓ.பி.எஸ். பிக்பாக்கெட் என்கிறார். ஒவ்வொரு அதிமுக தொண்டனும் கோயிலாக பார்க்கும் எம்.ஜி.ஆர். மாளிகையை (அதிமுக தலைமை அலுவலகம்) ஓ.பி.எஸ். தலைமையில் குண்டர்கள் வந்து சூறையாடியது தான் பிக்பாக்கெட். இதனை நாங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்து சென்று அவர் மீது கிரிமினல் வழக்கு போடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தன்னிடம் இருந்து ஓ.பி.எஸ். அமைச்சர் பதவியை பிடுங்கிக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், பதவி வெறியில் என்னிடம் இருந்து நிதித்துறையை பிடுங்கினார். இதுவெல்லாம் தான் பிக்பாக்கெட்.

 

கட்சியின் நலனுக்காக அவர் எந்தக் காலத்திலாவது செயல்பட்டுள்ளாரா. ஆரம்ப காலத்தில், அவருக்கு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை தெரியாது. அவரைப் பொறுத்தவரையில் அவரின் தலைவர்கள், வி.கே. சசிகலாவும், டி.டி.வி. தினகரனும்தான்.

 

தன் உடல் நலம் பாராமல் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜெயலலிதா அதிமுகவை அரியணையில் ஏற்றினார். பின் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் அது எவ்வளவு பெரிய மாபெரும் துரோகம். எடப்பாடி, சிறப்பான ஆட்சி நடத்திக்கொண்டிருந்தபோது, திமுக கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஒத்து ஊதினார். ஆனால், எடப்பாடி அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என எண்ணி அவரை கட்சியில் சேர்த்தார். அப்போது அவர் (ஓ.பி.எஸ்.) ஜெயலலிதாவின் மரணத்தில் அந்தக் குடும்பத்தின் மீது சந்தேகம் இருக்கிறது விசாரணை கமிஷன் போடவேண்டும் என்றார். அதை ஏற்ற எடப்பாடி விசாரணை கமிஷன் அமைத்தார்.  

விசாரணை கமிஷன் அமைக்கச் சொன்ன அவருக்கு பல முறை கமிஷனிலிருந்து சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. கடைசியில் தான் சென்றார். அப்போது கமிஷனில் ‘ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை’ என்றார். இது எவ்வளவு பெரிய முரண்.

 

அதேபோல், 22 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வந்தது. அதில், 10 அல்லது 9 தொகுதிகளில் அதிமுக வென்றால் தான் ஆட்சியை தக்கவைக்கமுடியும். அந்தத் தேர்தலில் எதிர் கட்சி பணமெல்லாம் செலவழித்தாலும், அதையெல்லாம் மீறி நாங்கள் 9 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்தோம். அந்த 22ல் பெரியகுளமும், ஆண்டிபட்டியும் அடக்கம். அதில் உங்களால் வெற்றி பெற முடிந்ததா.  நாடாளுமன்றத்துடன் சேர்ந்து நடைபெற்ற அந்த இடைத் தேர்தலில் தன் மகன் மட்டும் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து அவரது மகனை வெற்றி பெறவைத்து, இடைத் தேர்தல் நடந்த இரண்டு சட்டமன்றத் தொகுதியிலும் அதிமுக வேட்பாளரை தோற்கடிக்கிறார். அதன்பிறகு வந்த பொதுத் தேர்தலில் அவரின் மாவட்டத்தில் அவர் மட்டுமே வெற்றி பெறுகிறார். மற்றவர்களை வெற்றி பெறவைத்தாரா. அவரை பொறுத்தவரையில் கட்சி எப்படி போனாலும், அவருக்கு எடப்பாடி முதல்வராக வரக்கூடாது என எண்ணம். 

 

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். அதுபோல், பண்ருட்டியார் போன எந்தக் கட்சியாவது உருப்பட்டிருக்கிறதா. அவர் ஓ.பி.எஸ்.ஸிடம் எவ்வளவு பணம் வாங்கினார் என்பது தெரியவில்லை. அந்தப் பணத்திற்கு கை கூலியாக, எடப்பாடியையும், தலைமைக் கழக நிர்வாகிகளையும் தரக்குறைவாக பேசியுள்ளார். வயதானவர் பேச்சில் ஒரு அளவு வேண்டாமா. அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமே கிடையாது. மகாபாரதத்தில் எப்படி சகுனியோ அதுபோல், அரசியலில் பண்ருட்டி ராமச்சந்திரனை சகுனி என சொல்லலாம். எடப்பாடியின் எழுச்சியை ஓ.பி.எஸ்.ஆல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.