![EVKS Ilangovan says I don't understand what is happening in the Congress](http://image.nakkheeran.in/cdn/farfuture/-vLhQ3hNP9FJRmYIVgFKm4rBg3apypm3fK2HvPeSUN4/1700488386/sites/default/files/inline-images/evks-ilangovan_0.jpg)
தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை என்று ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்
ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (20-11-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழக காங்கிரஸ் கட்சியின் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. காங்கிரஸ் கூட்டம் நடந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பத்திரிக்கையில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். யாரையும் அழைக்காமல் கூட்டத்தை நடத்தியிருக்கின்றனர். இதற்கான மர்மம் என்ன என்பதே தெரியவில்லை.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தலை முதல் பாதம் வரை நோய் பாதிப்பு இருக்கிறது. அதனால், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவை. காவிரி நீர் விவகாரத்தில் நமக்கு எப்படி தாகம் ஏற்படுகிறதோ அதே போல் கர்நாடகா மாநிலத்தில் வாழும் மக்களுக்கும் அதே பிரச்சனை தான் இருக்கிறது. காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சேர்ந்து சுமூகமாக தான் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும்.