Skip to main content

“இபிஎஸ் ஒப்புக்கொண்டது சரிதான்” - டிடிவி தினகரன்

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

“EPS is right to agree” - DTV Dhinakaran

 

தஞ்சையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்லத் திருமண விழாவில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “என்னைப்போல் ஒரு லட்சம் பழனிசாமி இந்த அதிமுகவில் உள்ளார்கள். எவராலும் அசைக்க முடியாது. இபிஎஸ் இல்லையென்றால் எவராவது இந்த கட்சியை ஆளுவார். அதிமுகவில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் உள்ளார்கள். அவர்கள் இருக்கும் வரை யாராலும் அதிமுகவை தொட்டுப்பார்க்க முடியாது” எனக் கூறியிருந்தார். 

 

இந்நிலையில் திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்து பேசிய அவர், “பதவி வெறியாலும் ஒரு சிலரின் சுயநலத்தாலும் ஜெயலலிதாவின் இயக்கம் தொடர்ந்து பலவீனமடைந்து கொண்டு உள்ளது. உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து மீட்டெடுப்போம் என சொல்லியுள்ளார்.

 

அதிமுகவில் ஒரு லட்சம் பழனிசாமி உள்ளார்கள் என எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளார். அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் உள்ளார்கள் என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் ஒப்புக்கொண்டது சரிதான். அமமுகவில் சில நிர்வாகிகள் அணி மாறுகிறார்கள். சிலருக்கு பதவி குறைப்பு நடந்தாலோ அல்லது சொந்த பிரச்சனையின் காரணமாக அவ்வாறு செய்கிறார்கள். அது அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கத்தான் செய்கிறது. உடனடியாக அவர்களை விட திறமையானவர்கள் அப்பதவியில் அமர்த்தப்படுகிறார்கள். 

 

ராகுல் காந்தியின் பதவி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை நடத்துகின்றனர். 2013ல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் அரசியல் ரீதியாக பழிவாங்கல்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் தான் அந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்படுவதாக சொன்னார்கள். ஒருவர் பதவியில் இருக்கும் காலத்தில் அவருக்கு பதவி பறிபோனால் அவர் மேல் முறையீடு செய்து இறுதி தீர்ப்பு வரை அப்பதவியில் தொடரலாம் என்னும் நிலையை ராகுல் காந்திதான் ஒத்துக்கொள்ளாமல் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அவர் கொண்டு வந்த சட்டம் அவரையே இன்று பாதித்துள்ளது. சட்டப்பூர்வமாக ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு தேர்தல் ஆணையம் பதவி நீக்கம் செய்து இருப்பதில் நாம் பதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.