Skip to main content

நெருங்கிய விஜிலன்ஸ்... நெருக்கடியில் எடப்பாடி பழனிசாமி..! பரபரப்பு பின்னணி! 

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

Close vigilance .. Edappadi Palanisamy in crisis!

 

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சக்தி வாய்ந்த முகமாகத் திகழ்ந்த மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 36 இடங்களில் விஜிலன்ஸ் போலீசார் சோதனை நடத்தினர். 

 

சென்னையில் உள்ள இளங்கோவனுக்கு நெருக்கமான நண்பர்கள் வீடுகளிலும் விஜிலன்ஸ் சோதனை நடத்தியிருக்கிறது. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் இளங்கோவன் 25 கோடி ரூபாய்க்கு இந்திய பங்குச்சந்தைகளிலும், 45 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டுப் பங்கு வர்த்தகத்திலும் முதலீடு செய்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். 5.50 லட்சம் ரூபாய்க்கு அந்நிய செலாவணி வர்த்தகம் நடந்திருப்பதாகவும் சொல்கிறது விஜிலன்ஸ். சரியான சோர்ஸ் காட்டாத பட்சத்தில் இளங்கோவன் மீது ஃபெமா சட்டத்தின் கீழும் வழக்குப் பாயக்கூடும் என்கிறார்கள்.

 

இளங்கோவன் குறித்து பேசிய சில ர.ர.க்கள், ''ஆத்தூர் இளங்கோவன் சிறுவயதில் தந்தையை இழந்தவர். தாயார், வேகவைத்த பலாக்கொட்டை வியாபாரம் செய்தார். இளங்கோவனை சித்தப்பாதான் வளர்த்துள்ளார். பூர்வீக சொத்து என்பது 1.50 ஏக்கர் தரிசு நிலம். பெத்தநாயக்கன்பாளையம் அரசுப் பள்ளியில்தான் படித்தார். சேலத்தில் பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் இளங்கோவனின் மாமா கருப்பையா நடத்திவந்த டீக்கடையில் வேலை செய்தார். டீக்கடையும் இந்திய அரசியலும் சென்ட்டிமெண்ட்டானவை.

 

எம்ஜிஆர் ஆட்சியின்போது, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவராக இருந்த அன்பரசு என்பவருக்கு உதவியாளரானபோது, அரசியல் தொடர்பு ஏற்பட்டது. உள்ளூரில் சில அரசு ஒப்பந்தப் பணிகளை இளங்கோவன் பெயரில் எடுத்து செய்துவந்தார் அன்பரசு. பின்னர், மா.செ.வான டி.எம். செல்வகணபதி மூலம், 2011 உள்ளாட்சித் தேர்தலில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்யாண கிரி வார்டில் எப்படியோ சீட் வாங்கி, செல்வகணபதியை வரவைத்து வாக்குறுதியுடன் பிரச்சாரம் செய்யச் செய்து, வெற்றியும் பெற்றார் இளங்கோவன். பின்னர் மா.செ.வான மஞ்சினி முருகேசனிடம் ஒட்டிக்கொண்டு, அவருக்குத் தேவையானதை நிறைவேற்றினார். மஞ்சினியிடம் எல்லா வகையிலும் திறமையான ஆள் ஒருவர் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவர, இளங்கோவனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் அறிமுகம் ஏற்பட்டது. தேவையானவற்றை நிறைவேற்றித் தந்தார் இளங்கோவன். எடப்பாடி பழனிசாமி மூலமாக செங்கோட்டையன், சசிகலா, டிடிவி தினகரன், ராவணன் எனத் தொடர்பு ஏற்பட்டு, ஜெ. வரை அறிமுகம் கிடைத்தது. 2013இல் இளங்கோவனுக்கு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் பதவியையும் வாங்கிக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை 'பெரியவர்' என்றும், இளங்கோவனை 'சின்னவர்' என்றும் சொல்லும் அளவுக்கு செல்வாக்கை வளர்த்துக்கொண்டார்.

 

அதிமுகவில் இருக்கும் 'சித்தப்பு' நடிகர் ஒருவருக்கும் இளங்கோவனுக்கும் நல்ல நெருக்கம் உண்டு. அதன் மூலம் பெரிய மனிதர்களின் பசிக்கான தேவைகளும் நிறைவேற்றப்பட்டன. 2016 தேர்தலில், பறக்கும் படையினரே யூகிக்க முடியாத வகையில் கூட்டுறவு வங்கிகளில் பணத்தைப் பதுக்கி வைத்து, அங்கிருந்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து எடப்பாடி பழனிசாமியை அசத்தினார் இளங்கோவன். 2017இல் எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும், அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டங்களிலும் இளங்கோவனின் அதிகாரம் பெரிய அளவில் கொடிகட்டி பறந்தது.

 

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நேரத்தில், இளங்கோவன் தன்னிடம் 'லிக்விட்' ஆக இருந்த பணத்தை எல்லாம் ஆத்தூரைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மூலமாக சிலருக்கு மருத்துவமனைகள் கட்டுவதற்கும், சில பைனான்ஸ் அதிபர்களுக்கும், நகைக்கடை உரிமையாளர்களுக்கும் முதலீடாக கொடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர். இப்போது விஜிலன்ஸ் ரெய்டில் சிக்கியுள்ள இளங்கோவனின் வலதுகரமான குபாய் என்கிற குபேந்திரனும்கூட பண மதிப்பிழப்பு காலத்தில்தான் பெரிய அளவில் நகைக்கடைகளை விரிவாக்கம் செய்திருக்கிறார். உஷாராக முன்கூட்டியே ஒளித்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும், ரெய்டில் விடுபட்டவர்களையும் தோண்டித் துருவும்போது, எடப்பாடி பழனிசாமிவரை சிக்கல் நீளும்" என்கிறார்கள் இளங்கோவனை அறிந்தவர்கள். தனக்கு மிகவும் நெருக்கமான இளங்கோவன் வரைக்கும் விஜிலன்ஸ் ரெய்டு நடந்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி ஒருவித அச்சத்தில் இருக்கிறார் என்கின்றனர் அவரது வட்டாரத்தினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதிமாறன் அவதூறு வழக்கு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்தார். 

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.