Skip to main content

''எங்களுக்கும், ஓபிஎஸ்க்கும் மட்டுமல்ல டெல்லிக்கும் துரோகம் செய்யத் தொடங்கி விட்டார் இபிஎஸ்...'' - டி.டி.வி. தினகரன் பேட்டி

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

"Edappadi has started betraying not only us and OPS but also Delhi" - DTV Dinakaran interview

 

அண்மையில் பெய்த  வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதிகளில் அதிக மழைப்பொழிவு காரணமாகப் பல இடங்களில் மழைநீர் தேங்கியது.

 

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டி.டி.வி.தினகரன், ''மயிலாடுதுறை மாவட்டத்திலும் பன்னீர் செல்வத்திற்கு ஒரு மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கும் ஒரு மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார். இதுதான் அதிமுகவின் இன்றைய நிலைமை. எனவேதான் தலைமை இல்லாத கட்சியாக அதிமுக இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் எடப்பாடி பழனிசாமி தான்.

 

எப்படி அவரை ஆட்சிப் பொறுப்பில் கொண்டு வந்த எங்களுக்குத் துரோகம் செய்தாரோ, அதேபோல் ஆட்சி போய்விடும் என்ற நிலைமையில் உதவி செய்த ஓபிஎஸ்-க்கு செய்தாரோ, அதுபோல பொதுச்செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் அது வேறு யாருக்கும் கிடையாது என்று சொல்லி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் பொதுக்குழுவைக் கூட்டி உருவாக்கிவிட்டு இன்று ஜெயலலிதாவிற்கே துரோகம் செய்யும் வகையில் அந்தப் பதவிக்கு வர வேண்டும் என நினைக்கிறார்.

 

அவர் இடைக்கால பொதுச் செயலாளராகத் தன்னை அறிவித்துக் கொண்டார். பொதுக்குழு என்பது 2000 பேர் கலந்து கொள்வது. அவர்களை தன் வசப்படுத்துவது ஒன்றும் கடினமான விஷயம் அல்ல. எனவே இந்த 2000 பேர் மட்டும் கட்சியல்ல; தொண்டர்கள் எத்தனையோ லட்சக்கணக்கான பேர் இருக்கிறார்கள். நிர்வாகிகள் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களை எல்லாம் கூட வசப்படுத்தி விடலாம் ஆனால் தொண்டர்களையும், மக்களையும் வசப்படுத்த முடியாது.

 

துரோகத்தைத் தொடர்ந்து செய்கின்ற பழனிசாமி நான்காண்டுகள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று நடிக்கிறாரே நான்காண்டுகள் இவர்களது ஆட்சி தொடர்வதற்கும், ஓபிஎஸ்-க்கு ஆதரவு கொடுப்பதற்கும் காரணமாக இருந்த டெல்லிக்கும் அவர் துரோகம் செய்யத் தொடங்கிவிட்டார் என்பதுதான் உண்மை. அதனால்தான் டெல்லி அதைப் புரிந்து கொள்ளும் என்று நாங்கள் நினைக்கிறோம். எடப்பாடி பழனிசாமி என்ற துரோகத்தின் உருவம் வீழ்ந்தால்தான் அதிமுக கட்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.