Skip to main content

''கொஞ்சமும் பொறுத்துக் கொள்ள முடியாத எடப்பாடி... குற்றவாளி யாராக இருந்தாலும் விடமாட்டோம்''-மா.சுப்பிரமணியன் பேட்டி

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

ms

 

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 16 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் நிலையில், ஜெ.மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அறிக்கை எனப் பரபரப்பைக் கண்டுள்ளது தமிழக சட்டப்பேரவை. மறுபுறம் எதிர்க்கட்சி துணைத் தலைவரை நியமிப்பதில் தங்கள் கொடுத்த கோரிக்கையைச் சபாநாயகர் ஏற்கவில்லை என எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், ''தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 உயிர்களை பலி கொடுத்த அந்த கோர சம்பவம் குறித்தான ஒரு விசாரணை அறிக்கை தாக்கல், இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான இந்தி திணிப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி அரசின் தனி தீர்மானம் என ஏராளமான விஷயங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்றிருக்கிறது. இவைகளை எல்லாம் நேரடியாக பார்ப்பதற்கும், இதுகுறித்த செய்திகளை தெரிந்து கொள்வதற்கும் கொஞ்சம் கூட சகிப்புத்தன்மை இல்லாமல், பொறுத்துக் கொள்ள முடியாத வகையில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் கலவரத்தில் ஈடுபட்டு வெளியேற்றம் செய்யப்படும் அளவிற்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

இன்றைக்கு கூட சட்டமன்றத்திற்கு வராமல் திடீரென்று, சட்டமன்றம் நடைபெறுகின்ற நேரங்களில் மாநகர பகுதியில் எந்தவிதமான போராட்டங்களுக்கும் அனுமதி கிடைக்காது என்ற தகவல் தெரிந்திருந்தும் கூட வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தை அரங்கேற்றுகிறோம் என்று சொல்லி சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கு வழிவகுத்து இருக்கிறார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி மேல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்படும்'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'ஜெயலலிதா ரத்தவெள்ளத்தில் கிடந்தார். சாதாரண வார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளித்தார்கள் என கூறப்பட்டுள்ளது. நீங்கள் மருத்துவத்துறை அமைச்சர் எனவே அது குறித்து உங்கள் கருத்து என்ன?' என கேட்க, ஆணையத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிற குற்றச்சாட்டுக்கு உரியவர்கள் யாராக இருந்தாலும் சட்ட வல்லுநர்களுடன் பேசி உரிய நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுப்பார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.