Skip to main content

“மோடியைப் பற்றியும், இறந்த லேடியை பற்றியும் பேசுவதற்கு முன்பு அவர்களைப் படியுங்கள்” – அமைச்சர் துரைமுருகன்

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

Duraimurugan said before talking about Modi  Jayalalitha, read about them

 

திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனைப்படியும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் கருத்தியியல் பயிலரங்கம் என்ற தலைப்பில் திமுக மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான பயிலரங்க கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கி, 29 ஆம் தேதி மாலை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

 

திமுக மாணவரணி மாநில செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏவுமான எழிலரசன் தலைமையில் நடைபெறும் இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்த பயிற்சி பயிலகத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். உங்களை போல் மாணவனாக இருந்து வந்தவன் நான். இன்று இருப்பது போல் அன்று வசதிகள் கிடையாது. திமுகவே மாணவர்களால் உருவாக்கப்பட்டது தான். ஆட்சிக்கு வருவதற்கு மாணவரணி தான் திமுகவுக்கு பக்கபலமாக இருந்தது. பலரும் இயக்கத்தில் இருப்பார்கள் ஆனால் சிலர்‌ மட்டுமே கட்சிக்கு வருவார்கள். இயக்கத்தை பற்றியும், தலைவர்களையும் பற்றி முழுவதும் யார் முழுமையாக தெரிந்து கொள்வார்களோ அவர்கள் தான் கட்சிக்கு வருவார்கள்.

 

இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி‌ வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் தான் கட்சியின் கொள்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். இந்த‌ பயிற்சி‌ வகுப்பை நடத்துகிற மாநில மாணவரணி தலைவர் எழிலரசனுக்கு பாராட்டுக்கள். திருவண்ணாமலையில் முதன் முதலில் இந்தி எதிர்ப்பு மாநாட்டை துவக்கியவர்  அண்ணா. அவர் வம்சத்தில் வந்தவர் எழிலரசன். நாம் வரலாற்றை தெரிந்தால் மட்டுமே வாழ்க்கை நடத்த முடியும். மோடியை பற்றியும், இறந்த லேடியை பற்றியும் பேசுவதற்கு முன்பு அவர்களை பற்றி படியுங்கள். 

 

நம்முடைய இனம் கெட்டுப் போக காரணம் நம்முடைய வரலாற்றை மறந்ததுதான். பெரியார் இல்லை என்றால் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து இருக்க முடியாது. அவரால் தான் இன்று எல்லோரும் படிக்க முடிகிறது. தலைவர்களை புகழ்வது தவறல்ல. முதலில் படியுங்கள். நான் இன்றும் பெரியாரின் புத்தகங்களை படித்து வருகிறேன். அணிகளில் நிர்வாகிகளாக வருவது பெரிதல்ல, கட்சியின் கொள்ளைகளை புரிந்து கொள்ளவேண்டும். எதைப்பற்றி பேசினாலும் அதை பற்றி புரிந்து கொள்பவர்கள் மாணவர்கள்தான். உங்களை நம்பி இந்த இயக்கம் உள்ளது. அதற்காக முதலில் கொள்கைகளைத் தெரிந்து கொள்ளுங்கள், விவாதம் செய்யுங்கள். விவாதம் செய்து கொள்ளைகளை மற்றவர்களுக்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்குப் புரியவைத்து அவர்களை நம் இயக்கத்தில் சேருங்கள்” என்றார்.

 

இதில் சிறப்பு அழைப்பாளராகத் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டி கலந்து கொண்டு பயிற்றுவித்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் திமுக மாவட்ட செயலாளர் ஜோலார்பேட்டை சட்டமன்ற தேவராஜ், வேலூர் மா.செ நந்தகுமார் எம்.எல்.ஏ, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் போன்றோர் கலந்து கொண்டனர்.

 

தினசரி சராசரியாக 5 செக்ஷன்களில் திராவிட இயக்க தலைவர்கள் நீதிக்கட்சி முதல் இன்றைய திராவிட ஆட்சி வரை வகுப்புகள் எடுக்கின்றன. முதல்நாள் சுப.வீரபாண்டியன் பயிற்சி வழங்கினார். 3 நாட்களில் 15 வகுப்புகள் நடைபெறவுள்ளன. 15 மாவட்டங்களில் இருந்து வந்துள்ள மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என நூற்றுக்கும் அதிகமான நிர்வாகிகள் இதில் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் மூன்று நாள் ஏலகிரியிலேயே தங்கி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளவதற்கான தங்கும் வசதி, உணவு போன்றவையும் செய்து தரப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமையிலான அமைப்பினர் செய்துள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.