Skip to main content

எளிய மனிதர்களுக்கும் அதிகாரம்..!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

DMK Sivashankar's political  History


திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், ‘எளிய மனிதனுக்கும் அதிகாரம்’ என்ற அடிப்படையில் பல புதிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அவர்களில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் சிவசங்கர். இவருக்குப் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 

சிவசங்கர், மிகவும் எளிய மனிதர். கட்சிகளைக் கடந்து மாற்றுக் கட்சியினர் பொதுமக்கள் என எல்லோரிடமும் சகஜமாக நெருங்கி பேசி பழக கூடியவர். இவரது தந்தை மறைந்த சிவசுப்பிரமணியம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டப் பகுதியில் திமுகவில் முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியில் 1989ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். வழக்கறிஞரான இவர் தற்போது நீலகிரி எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான பெரம்பலூர் ஆ. ராசாவை அரசியலுக்கு கொண்டு வந்தவர். 

 

இந்த சிவசுப்பிரமணியன், கலைஞர், பேராசிரியர், முரசொலி மாறன் ஆகியோரின் அன்பைப் பெற்றவர். அதனடிப்படையில் இவருக்கு ஒருமுறை ராஜ்யசபா எம்.பி. பதவியையும் கட்சித் தலைமை அளித்தது. அப்பாவின் வழியில் சிவசங்கரும் தீவிரமாக கட்சிப் பணிகளில் செயல்பட்டவர். ஸ்டாலினின் அன்புக்குப் பாத்திரமானவர். இவரது தாயார் ராஜேஸ்வரி, இவரது மனைவி டாக்டர் காயத்ரி தேவி. சிவ சரண், சூர்யா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர், குடும்பத்தினரோடு இருந்ததைவிட கட்சியினருடனும் பொதுமக்களுடனும் அதிக நேரத்தை செலவு செய்தவர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

 

தற்போதைய அமைச்சர் சிவசங்கர், இலக்கியவாதியும் கூட; இவர், ‘மக்களோடு நான்’, ‘சோழன் ராஜா பிராப்தி’, ‘தோழர் சோழன்’ ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். சிலம்பு விளையாட்டு சம்மேளனத்தின் தமிழக அளவில் தலைவர், தடகள சங்கத்தின் தலைவர் இப்படி பன்முகத்தன்மை கொண்ட அரசியல்வாதி. 

 

இவர் 1996 - 2001 வரை பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர், 2001 - 2006 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், 2006 - 2011 ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர், 2011 - 2016 குன்னம் சட்டமன்ற உறுப்பினர் என தொடர்ந்து அரசியலில் தீவிரமாக இருந்துவந்தவர். 2016 சட்டமன்றத் தேர்தலில் இவரை திமுக அரியலூர் தொகுதியில் நிறுத்தியது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். மீண்டும் 2021 தேர்தலில் அரியலூர் தொகுதியில் கட்சித் தலைமை போட்டியிட வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கையோடு அரியலூர் தொகுதியில் பல்வேறு ஆக்க பணிகளை முனைப்புடன் செய்து வந்தார்.

 

ஆனால், குன்னம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு உட்கட்சி அரசியலை முறியடித்து எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று இப்போது அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். 2011 - 2016 அதிமுக ஆட்சியில், திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், சட்டமன்றத்தில் பல்வேறு கருத்துக்களை எதிரொலிக்க செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அந்தக் காலகட்டத்தில் அவ்வப்போது சட்டமன்றத்தில் திமுகவினரை பேசவிடாமல் ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் வெளியேற்றும்போது கடும் போராட்டம் நடத்தியவர்களில் சிவசங்கரும் ஒருவர். 

 

DMK Sivashankar's political  History

 

அதேபோன்று தொகுதியிலும் மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்துவார் தொகுதியில் மட்டுமல்ல கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் கட்சி பிரமுகர்களின் அனைத்து குடும்ப நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்ள இரவு, பகல் என்று பாராமல் சுற்றிக்கொண்டே இருப்பார் என்று அத்தொகுதி திமுகவினர் தெரிவிக்கின்றனர். மேலும், அதேபோன்று அதிமுக ஆட்சியில் மக்களுக்கு விரோதமான திட்டங்களை, பிரச்சினைகளை எதிர்த்து மாட்டுவண்டியில் ஊர்வலமாகச் சென்று போராட்டம் உட்பட பல்வேறு வித்தியாசமான போராட்டங்களை நடத்தியவர். 

 

தற்போது இவருக்கு அமைச்சர் பதவி அளித்துள்ளது திமுக தலைமை. இதனைக் கண்டு அரியலூர் மாவட்ட மக்கள் கட்சி கடந்து சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்தபோது திருச்சி, தஞ்சை பகுதியில்தான் திமுக, அதிமுக கட்சிகளில் அமைச்சர் பதவிகள் கிடைக்கும். மிகவும் பின்தங்கிய அரியலூர் மாவட்டம், தேவனூர் கிராமத்தில் பிறந்த சிவசங்கர் அவர்களை அமைச்சர் ஆக்கியுள்ளது வரலாற்றுப் பதிவு என்கிறார்கள் திமுக தொண்டர்கள்.

 

அதேவேளையில், மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகள் மூலம் மாவட்ட மக்களுக்குப் போதிய அளவு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. இந்த சிமெண்ட் ஆலைகளால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. கிராமச் சாலைகள் பல இடங்களில் மோசமாக சீர்கெட்டு கிடக்கின்றன இவையெல்லாம் சீர் செய்வார் என்ற பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர் மாவட்ட மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.