Skip to main content

''பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகவிற்கு தகுதி இல்லை''-பாஜக அண்ணாமலை பேட்டி!

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

"DMK is not qualified to form an alliance with BJP"-BJP Annamalai interview!

 

'மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்குமான உறவு இருக்குமே தவிர திமுகவிற்கும் பாஜகவிற்கும் எந்த விதமான உறவும் இருக்காது, பாஜகவிடம் திமுக குறைந்தபட்ச சமரசத்தைக்கூட செய்து கொள்ளாது' என திருமாவளவனின் மணிவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற தமிழக முதல்வர் குடியரசு தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்திருந்தார்.

 

இந்நிலையில் முதல்வரின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  ''அவர் சொல்லியது நல்லது. காரணம் என்னவென்றால் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்ஸோடு சமரசம் செய்து கொள்வதற்கோ, கூட்டணி வைப்பதற்கோ குறைந்தபட்ச தகுதி வேண்டும். அந்தக் குறைந்தபட்ச தகுதி என்னவென்றால் குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது, ஊழலற்ற அரசாங்கத்தை கொடுக்க வேண்டும், மக்களுக்கு நல்லாட்சி செய்வதற்கான ஆட்சி இருக்க வேண்டும். இந்த மூன்றுமே திமுகவிற்கு இல்லாத பொழுது எந்த முகத்தை வைத்துக்கொண்டு குறைந்தபட்ச ஆதரவு, குறைந்தபட்ச சமரசம் பற்றிப் பேசுவார்கள். அதனால் முதல்வருக்கு தெரிந்து விட்டது அருகதை இல்லை என்று. அதை ஒத்துக் கொண்டதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதைத்தான் பாஜகவின் தலைவராக கடந்த ஒன்றை வருடமாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். எந்த காலத்திலும் திமுக பாஜக உடன் கூட்டணி வைப்பதற்கு திமுகவிற்கு தகுதி கிடையாது. எனவே முதல்வர் சொல்லியது புதிது ஒன்று அல்ல'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.