Skip to main content

திமுக பொதுக்குழு! துணைப் பொதுச்செயலாளர்களில் மாற்றம்!

Published on 04/10/2022 | Edited on 04/10/2022

 

DMK General Committee! Change in deputy general secretaries!

 

திமுக தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார் மு.க.ஸ்டாலின். கடந்த 6 மாதங்களாக நடந்த திமுகவின் உள்கட்சித் தேர்தல் 99 சதவீதம் நடந்து முடிந்து விட்டது. இனி, திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான தேர்தல் வருகிற 7-ந் தேதி நடக்கிறது. 

 

தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார் மு.க.ஸ்டாலின். அதற்கான மனுத்தாக்கலை 7-ந் தேதி காலையில் தாக்கல் செய்கிறார். திமுகவின் சட்ட விதிகளின் படி மு.க.ஸ்டாலினின் மனு முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது.  பொதுச்செயலாளர், பொருளாளருக்குரிய மனுக்களும் ரெடியாகின்றன. 

 

மேற்கண்ட பதவிகளுக்கு போட்டியிருக்காது என்பதால் போட்டியின்றி அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார். இதன் மூலம், இரண்டாவது முறையாக தலைவராகிறார் ஸ்டாலின். குறிப்பாக, முதலமைச்சராக பொறுப்பில் இருக்கும் போது ஸ்டாலின் தலைவராவதால் திமுகவினர் மிக கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். தலைவர் உள்ளிட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, வருகிற 9-ந் தேதி நடக்கவிருக்கும் திமுகவின் பொதுக்குழு, செயற்குழுவில் இதற்காக ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு, துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு  நியமனம் நடக்கும்.

 

அந்த வகையில், துணைப் பொதுச்செயலாளர்கள் நியமன விதிகளில் மாற்றம் கொண்டு வர கட்சி மேலிடம் திட்டமிட்டிருப்பதாக திமுக சீனியர்களிடம் எதிரொலிக்கிறது. குறிப்பாக, திமுகவின் தற்போதைய சட்டவிதிகளின் படி, 5 துணைப் பொதுச்செயலாளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 7-ஆக உயர்த்த திட்டமிடப்படப்பட்டுள்ளது.

 

இது குறித்து திமுகவில் நாம் விசாரித்தபோது, “திமுக சட்டவிதிகளின் படி 5 துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவர் மகளிராகவும், ஒருவர் தாழ்த்தப்பட்டோர் இனத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். மற்ற மூவரும் பொது கேட்டகிரியில் இருந்து நியமிக்கப்பட வேண்டும். அந்த வகையில், தற்போது, 5 துணைப் பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகிய 5 பேர் இருக்கிறார்கள். இவர்களில் அந்தியூர் செல்வராஜ் தலித் பிரதிநிதித்துவத்திலும், சுப்புலட்சுமி ஜெகதீசன் மகளின் பிரதிநிதித்துவத்திலும் நியமிக்கப்பட்டவர்கள்.

 

மற்ற மூவரும் பொது கேட்டகிரியில் நியமிக்கப்பட்டாலும், ஆ.ராசா, தாழ்த்தப்பட்டோர் சமூகம் என்பதால் அவரை அந்த சமூகத்தினராகவே பார்க்கப் படுகிறார். அதாவது, 5 துணைப் பொதுச்செயலாளர்களில் தலித் சமூகத்துக்கு 2 பிரதிநிதித்துவமா? மற்ற சாதியினருக்கு என்ன வாய்ப்பு? என்றெல்லாம் சீனியர்களிடம் தொடர்ச்சியான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், மற்ற சமூகத்தினரை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் துணை பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கையை 7 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படலாம்” என்று சுட்டிக்காட்டுகிறார்கள் சீனியர்கள்.

 

துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், அதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்று மேலும் நாம் விசாரித்தபோது, “தற்போது இருக்கும் 5 துணைப் பொதுச்செயலாளர்களில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அந்த  இடத்துக்கு ஒரு மகளிரை நியமிக்க வேண்டும். அந்த வகையில், அந்த இடத்துக்கு கனிமொழி மற்றும் கீதா ஜீவன் ஆகியோரிடையே போட்டி இருக்கிறது. இதைத் தவிர மேலும் சில மகளிர் வி.வி.ஐ.பி.க்களும் முயற்சியில் இருக்கிறார்கள். 

 

மகளிர் பிரதிநிதித்துவத்தை அடுத்து மற்ற 4 துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் தற்போது இருப்பவர்களே மீண்டும் நியமிக்கப்படுவார்கள். அதே சமயம், சுப்புலட்சுமி ஜெகதீசன் கொங்கு வேளாளர் என்பதால் அந்த சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று பேச்சு எழுந்தது. அப்படி கொடுத்தால், வன்னியர் சமூகம், நாயுடு சமூகம் உள்ளிட்டவர்களிடம் அதிருப்தி உருவாகலாம். அதனால், கொங்கு வேளாளர் சமூகத்துக்கான பிரதிநிதித்துவம் போல, வன்னியர் மற்றும் நாயுடு இனத்துக்கும் பிரதிநிதித்துவம் வழங்கலாம் என யோசிக்கிறார்கள். 

 

அந்த வகையில், “துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை 5-லிருந்து 7 ஆக உயர்த்தும் பட்சத்தில், கொங்கு வேளாளர் சமூகத்துக்கு 1 இடம் ஒதுக்கப்படுகிறது. அதற்கு சக்கரபாணி, சாமிநாதன் இடையே போட்டி உருவாகியிருக்கிறது. மீதமுள்ள 1 இடத்தை வன்னியருக்கு கொடுத்தால் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கும், நாயுடு சமூகத்துக்கு கொடுத்தால் அமைச்சர் எ.வ.வேலுக்கும் வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள் திமுகவின் மேலிடத்தோடு தொடர்புடையவர்கள்.  

 

துணைப் பொதுச்செயலாளர்கள் மட்டுமல்லாமல் துணை அமைப்புச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆலோசித்து வருகிறது திமுக தலைமை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.