Skip to main content

"சிங்கப்பூரில் உதவி கேட்பது ஏமாற்று வேலை" - திண்டுக்கல் சீனிவாசன்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

dindigul srinivasan talks about cm foreign trip karur it raid 

 

கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும் போலி மதுபானங்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச்  சந்தித்தார்.

 

அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் சட்டப்படி என்ன இருக்க வேண்டும் என்று மாணவர் நலன் கருதி மத்திய அரசு நிபந்தனை விதிக்கிறார்கள். அந்த மாதிரி இல்லாத இடங்களை எல்லாம் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். இந்த குறைபாடுகளுக்கு சில தொழில்நுட்பக் காரணங்கள் இருக்கலாம். எனவே தவறான நடவடிக்கை எடுத்தால் கண்டிப்போம். சரியான முடிவு எடுத்தால் மத்திய அரசுக்கு ஆதரவு கொடுப்போம்.

 

செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். திமுகவினர் மற்றும் கரூர் மேயர் ஆகியோர் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கி, அதிகாரிகள் மருத்துவமனையில் இருக்கிறார்கள். மடியில் கணம் இல்லை வழியில் பயம் இல்லை என்று சொல்லும் திமுகவினர் வருமான வரித்துறையினரை தாக்குவது ஏன்? வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

 

சிங்கப்பூர் ஒரு குட்டி தீவு. சென்னையை விட சிறிது. ஒரு மணி நேரத்தில் சுற்றிப் பார்த்துவிடலாம். அங்கே சென்று உதவி கேட்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது; ஏமாற்று வேலை. முதல்வரின் சுற்றுப்பயணமானது கோடை வெயிலுக்காக அவரது வீட்டுச்சுற்றுலா நிகழ்ச்சி. எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று வந்தபிறகு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தோம் என்பது பற்றி வெள்ளை அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு எந்த மரியாதையும் கிடைக்காது. கடந்த 10 வருட ஆட்சியில் எல்லா சாலைகளும் அமைக்கப்பட்டது என்பது பொதுமக்களுக்கு தெரியும். காவிரி ஆறு, வைகை ஆறு மற்றும் தண்ணீர் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டன.

 

அதிமுக ஆட்சியில் ஒரு பைசா கூட வரி விதிக்கவில்லை. இப்போது எங்கு பார்த்தாலும் வரி விதிக்கின்றனர். வரி வசூல் செய்யவில்லை என்றால் அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லை என்று சொல்கிறார்கள். அதிமுக ஆட்சியில் வரி வசூல் செய்யவில்லை என்றாலும் அரசு மூலம் சம்பளம் கொடுத்தோம். செந்தில் பாலாஜி ஒரு சதுரடி கூட வாங்கவில்லை என்று சொன்னார். அப்படி என்றால் ஏன் கரூர் மேயர் வருமான துறையினரை அடிக்கின்றார். இதனை பொதுமக்கள் நம்பமாட்டார்கள். இன்று காலை ஒரு செய்தி வந்தது. ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தின் 10 கோடி ரூபாய், உதயநிதி ஸ்டாலின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன." எனப் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரிசையில் நின்று வாக்கினை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Chief Minister Stalin stood in line and cast his vote!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்த முதல்வர் ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தனது வாக்கினை செலுத்தினார்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.