Skip to main content

“திமுக அரசு எடுத்த முடிவு ஆபத்தானது..” - சி.டி. ரவி 

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

"The decision taken by the DMK government is dangerous ..." - CT Ravi

 

திருச்சியில் இன்று (14.09.2021) பாஜகவின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி கலந்துகொண்டார். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு சி.டி. ரவி செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், “கடந்த 20 ஆண்டுகளில் பிரதமர் மோடி மீது ஒரு லஞ்ச புகார் கூட இல்லை. சிறந்த முறையில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றிவருகிறார். நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். திமுகவின் எண்ணம் எப்போதும் மத்திய அரசுக்கு எதிராகவே உள்ளது. எத்தனையோ நல்ல திட்டங்களை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்கள் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. திமுக அரசாங்கம் இதை மறைக்க முயற்சி செய்கிறது. 

 

நீட் தேர்வை பொறுத்தவரை, கிராமப்புற மாணவர்கள் 2020இல் அதிகமாக தேர்ச்சி பெற்றனர். ஆனால், எப்போதும் நீட் தேர்வில் மத்திய அரசை குறை கூறவும், எதிர்க்கும் மனநிலையிலுமே உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். தொடர்ந்து எங்களது கட்சியை வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டுவருகிறோம். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும். 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க திமுக அரசு எடுத்த முடிவு ஆபத்தான முடிவு. அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே ஆபத்து” என்று தெரிவித்தார். 

 

தொடர்ந்து சீனாவின் அத்துமீறல் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “1962இல் இருந்த இந்தியா போல் தற்போது இல்லை; இந்தியா 2021இல் உள்ளது. இந்தியா தனியாக இல்லை, பல நாடுகளுடன் நட்புறவுடன் உள்ளது, இந்தியா எந்த நிலையையும் சந்திக்கத் தயாராக உள்ளது” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.