Skip to main content

மோடியின் ஆளுமை இதுதானா? கி.வீரமணி

Published on 22/04/2021 | Edited on 22/04/2021
ddd

 

கரோனாவின் இரண்டாவது அலை படையெடுப்பு - இதுவரை தன் பொறுப்பில் எல்லா உரிமைகளையும் வைத்திருந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்பொழுது மாநிலங்களின் தலையில் சுமத்துவது என்பது தன் கடமையைத்தட்டிக் கழிப்பதாகும்! பிரதமர் மோடியினுடைய ஆளுமை என்பது இதுதானா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

 

அறிக்கை வருமாறு:

 

நம் நாட்டில் கரோனாவின் பாதிப்பு காற்று வேகத்தில் இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, முன்பைவிட இப்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. இது வேதனையானதும், சோதனையானதுமான ஒரு காலகட்டமாகும்.

 

பொறுப்பிலிருந்து நழுவுகிறதோ மத்திய அரசு...?

 

முதற்கட்டத்தில் ஓராண்டுக்கு முன்பு முழுப் பொறுப்பேற்று கரோனா தொற்று தடுப்பு மேலாண்மையைக் கையில் எடுத்த மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசு, மிக முக்கியமான - இக்கட்டான இத்தருணத்தில் தனது கையைக் கழுவி விடுவதுபோல், ‘இனி எல்லாம் மாநிலங்கள் பொறுப்பு’ என்று கூறிடுவது, பொறுப்பிலிருந்து நழுவுகிறதோ என்ற அய்யத்தையே உருவாக்குவதாக இருக்கிறது.

 

பிரதமர் மோடியின் ஆளுமை - கரோனாவைப் பொறுத்தவரை - தலைகீழான ஆளுமையாகவே நடைபெற்று வருகிறது.

 

1. முதலில் கலந்தாலோசித்திருக்க வேண்டியது பிரபல தொற்று நோய் மருத்துவர்களிடமாகும். பிரதமர் தொடக்கத்தில் அதைச் செய்யாமல், இப்போது அவர்களை அழைத்து ஆலோசிப்பது தாமதிக்கப்பட்ட ஓர் ஆளுமை அணுகுமுறையாகும்.

 

2. மாநிலங்களின் பொறுப்புக்கு விட்டு மத்திய அரசு கண்காணிப்பும், மேற்பார்வையும் செய்து வந்தால், அந்தந்த மாநில நிலவரத்திற்கேற்ப ஆங்காங்கே நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்றிருக்கக் கூடும்.

 

பொது சுகாதாரம் என்பது அரசமைப்புச் சட்டப்படி - மாநில உரிமைகள் என்பது ஒருபுறமிருந்தாலும், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவை மாநிலங்கள்தானே!

 

ஆக்கபூர்வ தடுப்பு அணுகுமுறைகள் இல்லை

 

ஒரு சிறு எடுத்துக்காட்டு, மாநிலங்கள் தங்கள் தங்கள் தேவைக்கேற்ப தடுப்பூசிகளை வரவழைப்பதை அனுமதித்து, (கண்காணிப்பை நிகழ்த்தி) பாதிக்கப்பட்டோரின் வயது, தேவைகள் இவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் மத்திய - மாநில ஆளுமைகள் அமையவில்லை.


பிரதமர் பேசிய பேச்சில் ஆக்கபூர்வ தடுப்பு அணுகுமுறைகள் இல்லை.


முன்பு முழு ஊரடங்கை முதலில் செய்ய யோசனை கூறிய மத்திய அரசும், பிரதமரும் இப்போது ‘‘அது கடைசி ஆயுதமாக இருக்கவேண்டும்‘’ என்று பிளேட்டைத் திருப்பிப் போட்டுக் கூறுவது விசித்திரமாக உள்ளது!


‘ஆக்சிஜன் பற்றாக்குறை’ என்ற குரல் மாநிலங்களில் எழுகிறது; ‘‘இல்லை, இருப்பு இருக்கிறது’’ என்கிறது மத்திய அரசு - பின் எப்படி நோயாளிகள் அந்தப் பற்றாக்குறையினால் மரணம் அடையும் வேதனை ஏற்படுகிறது? எங்கோ ஆளுமையில் இருக்கும் இடைவெளிதானே இதற்குக் காரணமாக இருக்க முடியும்!

 

வட மாநிலங்களில் நடைபெறும் அவலங்கள்!

 

வட மாநிலங்களில் பலவற்றில் போதிய படுக்கைகள் ஏற்பாடு இல்லை. வெட்ட வெளியில் பரிசோதனை நடைபெறுவதை ஊடகங்கள் காட்சிப்படுத்தும் அவலமும் உள்ளது!


‘‘உண்மைகளை மறைப்பதால் கரோனாவைத் தடுக்க முடியுமா?’’ என்ற தலைப்பில் ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் வெளிவந்துள்ள தலையங்கம் (2 ஆம் பக்கம் காண்க) உண்மையை அப்பட்டமாக எடுத்துரைக்கிறது. மக்களாட்சியில் இந்த அணுகுமுறை நோய் பரவுதலைவிட மிகவும் கொடுமை அல்லவா?

 

தடுப்பூசிக்குக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்பது ஏற்கத்தக்கதா?

 

எல்லா மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய - மாநில ஆளும் அரசுகளின் தலைமை, உறுதியளித்துப் பிரச்சாரம் செய்துவிட்டு, இப்போது 18 வயதுள்ளவர்களுக்கு மே ஒன்றாம் தேதி முதல் போடப்படும் தடுப்பூசிக்குக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்பது ஏற்கத்தக்கதா?


பேரிடர் நிதி, பிரதமர் உருவாக்கிய தனி அறக்கட்டளை நிதி (‘PM Cares’) இவை இந்த நிதிச் சுமையை ஏற்பதுதானே நியாயம்?

 

தனியார் நிறுவனங்கள் இனி இதை வெளிச்சந்தையில் தாறுமாறு விலையில் விற்கும் நிலையை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியுமா?

 

‘குஜராத் மாடல்’ என்று மார்தட்டிய மோடியின் ஆளுமை குஜராத்தில் எப்படிப்பட்ட அடிக்கட்டுமானத்தை அவரது 13 ஆண்டு ஆட்சி கால பொது சுகாதாரத் துறை ஏற்படுத்தியுள்ளது? பொது சுகாதாரத் துறையின் மேன்மையைப் பெருக்கவோ, வளர்க்கவோ மத்திய அரசு, மாநிலங்களில் கடந்த ஓராண்டில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?  ‘‘வளர்ச்சி, வளர்ச்சி,’’ ‘சப்கோ சாத், சப்கோ விகாஸ்’ தேர்தல் முழக்கமான நிலை - செயலுருவம் கொள்ளவில்லையே!

 

செயலுருவம் கொண்டிருந்தால், இன்றுள்ள தொடர் வேதனைகள் பற்பல மாநிலங்களுக்கு ஏற்பட்டிருக்குமா?


‘நீட்’ தேர்வு போன்ற மருத்துவ வளர்ச்சி முட்டுக்கட்டைகள் வேகமான வளர்ச்சியைத் தடுக்கத்தான் பயன்பட்டன என்பதை ஏனோ இன்னமும் ஒப்புக்கொள்ள மோடி அரசு மறுக்கிறது?

 

விரைந்து செயல்படவேண்டியது அவசியம்

 

‘‘Better late than Never’’ ’ இப்போது - ‘‘காலந்தாழ்ந்தேனும் செய்க’’ என்ற அடிப்படையில், பொது சுகாதாரம் - மக்கள் நல்வாழ்வுத்  துறை - அடிக்கட்டுமானத்தை - மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், மருந்தியல் கல்லூரிகள் இவற்றை நாடு தழுவிய அளவில் - மாநில அரசுத் துறையில் பெருக்கிட தாராளமாக நிதியை ஒதுக்கவேண்டும். 3 விழுக்காடு பொது சுகாதாரத் துறை நிதியை - 6 விழுக்காடாக உடனே உயர்த்தி, கட்சிக் கண்ணோட்டம், அரசியல் கண்ணோட்டமின்றி, மருத்துவ நிபுணர்களைக் கொண்ட ஆளுமைக் குழுக்களை - ஆலோசனைக் குழுக்களை அமைத்து விரைந்து செயல்படவேண்டியது அவசியம் என்ற பாடத்தை காலம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.


கரோனா இழப்புகள் மீண்டும் திரும்பாமலும், விரிவாகப் பரவாமலும் தடுக்க இப்படிப்பட்ட ஆக்க ரீதியான அணுகுமுறைகளை மத்திய அரசு - மாநில உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, செயல்படல் அவசியமாகும்!

 

மக்களாட்சியில் அனுபவங்கள் நமக்குப் பாடங்களாகட்டும்

 

மக்களாட்சியில் அனுபவங்கள் நமக்குப் பாடங்களாகட்டும்; பாடங்களால் ஏற்படும் படிப்பினைகள் நமக்குத் தீர்வுக்கான சரியான பாதையை அமைத்துக் கொடுக்கட்டும்!


அலட்சியமோ, பிடிவாதமோ, தன்முனைப்போ, மக்களாட்சியின் மாண்புகளைச் சிதைத்துவிடும் - மறவாதீர் ஆட்சியாளர்களே!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

கைவிரித்த பா.ஜ.க.! எதிர்த்து களம் இறங்கும் வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
BJP leader is contesting against Radhika in Virudhunagar

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக, தன்னுடைய தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தமாக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி,  புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது.

BJP leader is contesting against Radhika in Virudhunagar

காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக கூறிய சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா என்பவர் விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், பாஜக தலைமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த டாக்டர் வேதா  சுயேட்சையாக தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.