Skip to main content

கரோனா அதிகரிக்கப்புக்கு காரணமான சீனா நிறுவனத்துக்கு துணைப் போகும் கலெக்டர்!  காங்கிரஸ் எம்.பி.குற்றச்சாட்டு!  

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
M. K. Vishnu Prasad

 

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களை தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்களை அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் அதிகாரிகள் பலரும் முதல்வர் எடப்பாடியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

 

இதனடிப்படையில் ஊரடங்கும், மாவட்டங்களுக்கிடையே பொது போக்குவரத்திற்கு தடையும் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தமிழக முதவருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. டாக்டர் விஷ்ணுபிரசாத். 

 

அவரிடம் நாம் பேசியபோது, ’’திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு தொகுதியில் இருக்கிறது சிப்காட் தொழிற் பேட்டை!  இந்த சிப்காட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் சைனா மற்றும் தைவான் நாடுகளை சேர்ந்த செருப்பு தயாரிக்கும் நிறுவனங்கள்தான் பிரதானவை. இந்த நிறுவனங்களில் செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 27,000 பணியாளர்கள் இந்த சிப்காட்டில் வேலை பார்க்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு சிப்காட் வளாகம் மிக முக்கிய காரணியாக இருக்கிறது. கட்டாயப்படுத்தி பணி புரிய வைக்கும் 27 ஆயிரம் தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. சைனா மற்றும் தைவான் கம்பெனி நிர்வாகம் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டவில்லை.

 

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் பேசிய நான், கொரோனா பரவலுக்கு காரணம் சிப்காட் வளாகம் தான் . மூன்று வாரங்களுக்கு வளாகத்தை லாக் டவுன் செய்யுங்கள் என வலியுறுத்தினேன். ஆனால், அவர் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. ஒரே ஒரு நாள் நடக்கும் திருவண்ணாமலை கிரி வலத்தால் தொற்று பரவும் என சொல்லி கிரிவலத்துக்கு தடைப்போட்ட கலெக்டர், தொற்று பரவலுக்கு காரணமாக இருக்கும் சிப்காட் வளாகத்தை மூட முயற்சிக்கவில்லை. சைனா மற்றும் தைவான் நிறுவனங்களின் பிஸ்னெஸ் பாதிக்கும் என மாவட்ட நிர்வாகம் கருதியிருக்கலாம். மாவட்ட நிர்வாகத்துக்கும் சிப்காட்டில் உள்ள நிறுவனங்களும் ஏதோ ‘நட்பு’இருக்கிறது.

 

இந்த சூழலில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத் துவங்கி விட்டது. இதனால் மாவட்டத்தையே மூன்று வாரங்களுக்கு லாக் டவுன் செய்தால்தான் தொற்றை குறைக்க முடியும். திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்று அதிகரிக்க காரணம் சிப்காட் வளாகமும், அதற்கு துணைப் போகும் மாவட்ட நிர்வாகமும்தான் ! அதனால், சிப்காட் வளாகத்தை இழுத்து மூட வேண்டும் ‘’ என ஆவேசப்படுகிறார். இது குறித்துதான் முதல்வர் எடப்பாடிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி.!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.