Skip to main content

''சார் நீங்க வரணும்னு முதல்வர் ஆசைப்படுறார்''- எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய துரைமுருகன்!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

'' The Chief Minister wants ... I spoke to the EPS myself .. '' -  Minister Duraimurugan!

 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் படத்திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கலைஞரின் திருவுருவப் படத்தை சட்டப்பேரவையில் நேற்று திறந்து வைத்தார். 

 

இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழக பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் தமிழக எதிர்க்கட்சியான அதிமுக இந்நிகழ்ச்சியைப் புறக்கணித்தது.

 

அதிமுக, கலைஞர் படத்திறப்பு விழாவைப் புறக்கணித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை சட்டமன்றத்தில் திறக்கும்போது திமுக அந்நிகழ்வைப் புறக்கணித்ததுதான் தங்களது தற்போதைய புறக்கணிப்புக்கும் காரணம்'' எனத் தெரிவித்திருந்தார். 

 

'' The Chief Minister wants ... I spoke to the EPS myself .. '' -  Minister Duraimurugan!

 

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன், ''நானே எடப்பாடியாரை தொடர்புகொண்டேன். அப்பொழுது அவரிடம் சொன்னேன். சார் நீங்க வரணும்னு முதல்வர் ஆசைப்படுறார். நாங்களும் விரும்புகிறோம். இந்த விழாவில் நீங்கள் கலந்துகொள்வது மட்டுமல்ல அந்த விழாவில் சரிசமமாக உட்கார்ந்து இந்த விழா குறித்து வாழ்த்துரை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே நீங்கள் தப்பாமல் வரவேண்டும் என உங்கள் அனுமதியைக் கோருகிறோம் என்று சொன்னேன். அதற்கு அவர், நான் காரிலே சேலத்திற்கு சென்றுகொண்டிருக்கிறேன். நான் போய்ச் சேர்ந்த பிறகு யோசித்துச் சொல்கிறேன் என்றார். விழாவிற்கு வாருங்கள் என்று கேட்டவன் நான். ஆனால் விழாவுக்கு வரவில்லை என்று என்னிடமே சொல்லவில்லை. ஆனால் சட்டசபை செக்ரட்டரி மூலம் இந்த விழாவிற்கு அதிமுக வராது என்று சொல்லிவிட்டார். ஜெயலலிதா படம் திறக்கப்படும்போது எங்களிடம் சொல்லவில்லை. நீங்கள் இந்த விழாவிற்கு வாங்க என்றுகூடக் கூப்பிடவில்லை. பத்தோடு பதினொன்னாக ஒரு இன்விடேஷன் அனுப்பினாங்க. எதிர்க்கட்சியாக இருந்த எங்களை முறையாக அழைக்கவில்லை என்பதால் நாங்கள் கலந்துகொள்ளவில்லையே தவிர வேறு காரணமும் இல்லை''என்றார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.