Skip to main content

அமமுக வேட்பாளருக்கு நெஞ்சுவலி; பதட்டத்தில் டி.டி.வி!

Published on 22/03/2021 | Edited on 22/03/2021

 

Chest pain for an aspiring ammk candidate

 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில், அமமுக சார்பில் போட்டியிடும் எஸ்.காமராஜ், திருவாருர் தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் நசிமாபானு, நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் ராஜேந்திரன் மற்றும் திருத்துறைப்பூண்டி மக்கள் அரசு கட்சி வேட்பாளர் ரஜினிகாந்த் ஆகியோரை ஆதரித்து பெரியார் சிலை முன்பு டி.டி.வி தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொள்வார் என பொதுமக்களை திரட்டியிருந்தனர் அக்கட்சியினர். மன்னார்குடியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் காலம் கடந்து வந்து பொதுமக்களிடம் பேசாமல் சென்றதால் பொதுமக்கள், தொண்டர்கள் என அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். அப்போது, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். காமராஜ் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அங்கு பலமான கட்சிகளான திமுக, அதிமுகவினர் கூட்டும் கூட்டத்தைத்தாண்டி மக்களைத் திரட்டி அதிரவிட்டிருந்தனர் அமமுகவினர். திருவாரூர் மாவட்டம் முழுவதுமே அமமுக மா.செவான எஸ்.காமராஜிக்கு ஆதரவாளர்கள் அதிகம். அவர்கள் அனைவருமே மாஸ் காட்டுவதற்காக மன்னார்குடியை திரட்டி அதிமுக, திமுக வேட்பாளர்களை மிரளவிட்டிருந்தனர். இந்நிலையில், மாலை 6 மணிமுதல் காத்திருந்த பொதுமக்களுக்கு இளைப்பாறும் விதமாக ஆடல்பாடல் நிகழ்ச்சிகள், ஆடல்பாடல் நிகழ்ச்சிகளுக்கு இடையே மக்கள் தலைவர் டிடிவி ‘இதோ வந்துவிட்டார், அதோ வந்துவிட்டார், பத்து நிமிடத்தில் வந்துவிடுவார்’ என பாடலுக்கு இடையிடையே விளம்பரம் செய்துகொண்டிருந்தனர். 

 

Chest pain for an aspiring ammk candidate

 

அதே நேரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்குப் பிரச்சாரம் செய்யச் சென்ற டி.டி.வி. தினகரன், குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் கூடியிருந்த தொண்டர்களும், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர். இதற்கிடையில், இரவு 10.12 மணிக்கு மேல் பிரச்சார மேடைக்கு வந்தார் டிடிவி. தினகரன். தேர்தல் பரப்புரை நேரம் முடிந்துவிட்டதால், பொதுமக்களிடமும், தொண்டர்களிடமும் பேசமுடியாமல் போனதால், கை அசைத்துவிட்டு சென்றுவிட்டார். இதனால் அமமுகவின், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டதோடு, தனது சொந்த ஊரிலேயே பேச முடியாமல் போய்விட்டாரே என்கிற வருத்தம் அமமுகவினர் மத்தியில் ஏற்பட்டது.

 

இந்தச் சூழலில் அமமுக மா. செவான எஸ். காமராஜிக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து எஸ்.காமராஜிக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம், “திருவாரூர் மாவட்டத்தில் ஆளும் கட்சி அமைச்சரான ஆர்.காமராஜிக்கு நிகரான ஆதரவாளர்களை வைத்திருப்பவர் அமமுக மாவட்டச் செயலாளர் எஸ். காமராஜ். இருவருக்குமே சொந்த ஊர் மன்னார்குடி என்றாலும் எஸ். காமராஜ் மீது உள்ள அச்சத்தால், மன்னார்குடியில் போட்டியிடாமல் நன்னிலத்தை தேர்வு செய்தார் அமைச்சர் காமராஜ். அந்தளவிற்கு செல்வாக்கு உள்ளவருக்கு இப்படிச் சங்கடமான சூழல்வரும்போது மனம் வேதனைபடத்தானே செய்யும், அவருக்கு உண்டான மன அழுத்தம் நெஞ்சுவலியாக மாறிடுச்சி, தற்போது டி.டி.வி. தினகரனுக்கு பிரதான தளபதிகளாக இருப்பவர்களில் காமராஜும் ஒருவர். அவருக்கு இப்படி நடந்தது டி.டி.வி’யை சங்கடப்படவைத்துள்ளது” என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.