Skip to main content

முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மீது வழக்குப்பதிவு..! 

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

Case filed against former minister's aide ..!

 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகரின் முன்னாள் நகர்மன்ற து.தலைவர், அ.தி.மு.க.வின் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற து.செ. உள்ளிட்ட பதவிகளை வகித்த முக்கியப் புள்ளி கண்ணன். சங்கரன்கோவில் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான ராஜலட்சுமியின் அரசியல் ஆலோசகராகவும் இருப்பவர். நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் ராஜலட்சுமி 5354 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். 

 

கடந்த 10ம் தேதி அன்று சங்கரன்கோவில் நகரின் ராமசாமியாபுரம் தெருவில் குடிநீர் சரியாக வரவில்லை என அங்குள்ள மக்கள் நகராட்சிக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். அதையடுத்து நகராட்சிப் பணியாளர்கள் தண்ணீர் செல்கிற வால்வை சரிசெய்து கொண்டிருந்தார்கள். இந்தத் தகவல் கண்ணனுக்கும் போக, அவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் அங்கு வந்திருக்கிறார். அப்போது, அந்த தெருவில் ரோடு வசதி செய்து தரப்படவில்லை எனக்கூறி ஆர்ப்பாட்டத்திற்காக அங்குள்ளவர்களைத் திரட்ட அவர் முற்பட்டதாகத் சொல்லப்படுகிறது. அதற்கு மக்கள் வரவில்லை என தெரிகிறது.

 

இந்த நிலையில் தகவலறிந்த மற்றொரு தரப்பினர் அங்கே திரண்டு வந்திருக்கின்றனர். அவர்களோடு கண்ணன் பேசிக் கொண்டிருந்தபோது, இரண்டு தரப்பினருக்கிடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு தரப்பிலும் வார்த்தைகள் முற்றி விவகாரமாகியிருக்கிறது. பதற்றச் சூழல் ஏற்படுவதைக் கண்ட கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். அதே நேரத்தில் தி.மு.க.வின் நகரச் செயலாளரான சங்கரனும் ஸ்பாட்டிற்கு வந்திருக்கிறார்.

 

மக்கள் நடந்தது குறித்துக் கண்ணன் மீது நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, நகர தி.மு.க.வின் செயலர் சங்கரனும் கண்ணன் மீது புகார் செய்திருக்கிறார்.

 

இதனடிப்படையில் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார் காவல் நிலைய உதவி ஆய்வாளர்.

 

இதுகுறித்து நாம் கண்ணனை அலைபேசியில் தெடர்புகொண்ட போது, “நான் அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தேன். அப்போது ராமசாமியாபுரம் பகுதியில் குடிதண்ணீர் வரவில்லை என்று தெரிவித்தார்கள். அதை நான் சரிசெய்யும் பொருட்டு நகராட்சி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டேன். அவர்களும் வந்து அதை சரிசெய்து கொண்டிருந்தனர். அதற்குள் கூட்டம் திரண்டுவிட்டது. அதுசமயம் நான் தகராறு செய்யவில்லை, யாரையும் அவதூறாகவும் பேசவுமில்லை” என்றார்.

 

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.