Skip to main content

''கார் ஓசி, காரில் ஏசி ஓசி... எல்லாமே ஓசி...''-செல்லூர் ராஜு பேட்டி

Published on 02/10/2022 | Edited on 02/10/2022

 

"Car is OC, car AC is OC...everything is OC"-Sellur Raju interview

 

மக்கள் திட்டங்களை அமைச்சர்களே கொச்சைப்படுத்துவது முறையல்ல என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''போக்குவரத்து துறையை பொறுத்த அளவிற்கு முதன்மைச் செயலாளர், அமைச்சர்களை அழைத்து வைத்து உடனடியாக முதல்வர் பேசியிருக்க வேண்டும். அரசு பேருந்துகளில் மதுரையிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு எவ்வளவு வாங்குகிறோம். அதே பயணத்திற்கு தனியார் பேருந்துகளில் எவ்வளவு வாங்குகிறார்கள். அவர்களுக்கு எப்படி கட்டுபடியாகிறது. அரசு சொகுசு பேருந்துகளை நடத்துகிறது, குளிர்சாதன பேருந்துகளை நடத்துகிறது. இதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறோம் என்று கேட்க வேண்டும். ஆனால் இதுவரை முதல்வர் அது மாதிரி ஒரு நடவடிக்கை எடுத்ததாக எங்களுக்கு தெரியவில்லை. எல்லா இடத்திலும் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதைத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

 

இது விளம்பர ஆட்சி, மக்களுக்கான ஆட்சியாக இது தெரியவில்லை. எல்லா அமைச்சர்களுக்கும் வாய் கொழுப்பு அதிகமாயிருச்சு. பாண்டியராஜன் நடித்த ஒரு படம் இருக்கிறது 'வாய்க்கொழுப்பு' என்று, எதிலும் வாய் துடுக்காகப் பேசிவிட்டு போகிறார்கள். அதுபோன்று நிறைய அமைச்சர்கள் இப்பொழுது வாய் கொழுப்பாக ஏதாவது பேசி இன்னைக்கு மக்கள் மத்தியில் இந்த அரசுக்கு இருந்த கொஞ்சநஞ்ச பேரையும் கெடுத்துக் கொண்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. சமீப காலமாக உங்களுக்கெல்லாம் தெரியும் கட்டணம் இல்லாத பேருந்தில் செல்வதற்கு மக்கள் அச்சப்படுகிறார்கள். நாங்கள் கட்டணத்தை கொடுக்கிறோம் எங்களுக்கு உரிய மரியாதையை கொடுங்கள் என்று பாட்டி முதல் மாணவிகள் வரை கேட்பதற்கு ஆரம்பித்து விட்டார்கள். இதனால்தான் ஜெயலலிதா அவருடைய ஆட்சியில் எதையும் இலவசம் என்று சொல்லவில்லை. விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், விலையில்லா சைக்கிள், விலை இல்லா பரிசு பெட்டகம் என்று சொன்னார்கள். அதை இலவசம் என்று சொன்னால் மக்களை கொச்சைப்படுத்துவதாக அமைகிறது. அமைச்சர்களாக இருந்தாலும் எல்லோரும் மக்களுடைய பணத்தில் தான் அனுபவிக்கிறோம். விமான டிக்கெட் ஓசி, கார் ஓசி, காரில் இருக்கின்ற ஏசி ஓசி, டிரைவர் ஓசி, டீசல், பங்களா ஓசி, எல்லாமே ஓசி இப்படி ஓசி ஓசியாக அனுபவித்துவிட்டுஇன்று மக்களுக்கான இலவச திட்டங்களை கொச்சைப்படுத்துவது முறையல்ல'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.