Skip to main content

பாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல்! 

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

ddd

 

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுக தலைமையுடன் முரண்பட்டு வரும் பாஜக தலைமை, அதிமுக கூட்டணியை தொடர்வதா? அல்லது முறித்துக் கொள்வதா? என்கிற முடிவுக்கு வரவில்லை. அதேசமயம், தமிழகத்தில் கூட்டணி குறித்து பல்வேறு விவாதங்களை நடத்தியபடி இருக்கிறார் மத்திய அமைச்சர் அமீத்ஷா. வருகிற 14-ந்தேதி சென்னைக்கு விசிட் அடிக்க அவர் திட்டமிட்டிருக்கிறார். அவரது வருகையின் போது கூட்டணி குறித்து உறுதியான முடிவை தமிழக பாஜகவினருக்குத் தெரிவிப்பார் என்கிறது கமலாலய வட்டாரம்! 


இதற்கிடையே, அதிமுகவுடன் கூட்டணி தொடரும் பட்சத்தில் 45 இடங்களுக்கு குறைவில்லாமல் போட்டியிட நினைக்கும் பாஜக, தற்போது 38 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் தயாரித்து வைத்திருக்கிறதாம். தயாரிக்கப்பட்டுள்ள அந்த உத்தேசப் பட்டியல் 90 சதவீதம் மாறுவதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள். 


இதோ அந்த உத்தேசப்பட்டியல்…


சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – திருமதி.குஷ்பு சுந்தர்.சி. 
தி.நகர்-ஹெச்.ராஜா, கொளத்தூர் – ஏ.என்.எஸ்.பிரசாத், 
மயிலாப்பூர் – கரு.நாகராஜன், துறைமுகம்-வினோஜ், 
வேளச்சேரி – டால்ஃபின் தரணி , மாதவரம்-சென்னைசிவா, 
திருவள்ளூர்-லோகநாதன், செங்கல்பட்டு-கே.டி.ராகவன், 
கே.வி.குப்பம்-கார்த்தியாயினி, பென்னாகரம் - வித்யாராணி, 
திருவண்ணாமலை - தணிகைவேல், போளூர்-சி.ஏழுமலை, 
ஓசூர்-நரசிம்மன், சேலம் மேற்கு-சுரேஷ்பாபு , 
மொடக்குறிச்சி-சிவசுப்ரமணியன், ராசிபுரம் வி.பி.துரைச்சாமி, 
திருப்பூர் வடக்கு- மலர்க்கொடி,  கோவை தெற்கு - வானதி சீனிவாசன், 
சூலூர்-ஜி.கே.நாகராஜ் , திருச்சி கிழக்கு-டாக்டர் சிவசுப்பிரமணியம், 
பழனி-என்.கணகராஜ், 
அரவக்குறிச்சி – அண்ணாமலை  ஐ.பி.எஸ். (ஓய்வு),
ஜெயங்கொண்டம்-அய்யப்பன், திட்டக்குடி-தடா பெரியசாமி, 
பூம்புகார்- அகோரம், மயிலம்-கலிவரதன், புவனகிரி-இளஞ்செழியன், 
திருவையாறு-பூண்டி வெங்கடேசன், தஞ்சை-கருப்பு முருகானந்தம், 
கந்தர்வக்கோட்டை-புரட்சி கவிதாசன், சிவகங்கை-சத்தியநாதன்,  
பரமக்குடி-பொன்.பாலகணபதி, மதுரைகிழக்கு-இராம. சீனிவாசன், 
நெல்லை-நயினார் நாகேந்திரன், சாத்தூர்-மோகனராஜுலு, 
தூத்துக்குடி-சசிகலா புஷ்பா, நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.