Skip to main content

திமுக எம்.பி.க்களுக்கு எதிராக வரிந்துகட்டும் பாஜக தலைவர்!

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

திமுகவின் ’ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழக அரசால் மட்டுமே தீர்க்க முடியும் என்கிற பிரச்சனைகளை மனுவாக தயாரித்தது திமுகவின் வியூக வல்லுனர் குழுவான ஐ-பேக் டீம் ! இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்னின் பார்வைக்கு கொண்டு சென்றதை அடுத்து, மாவட்ட ஆட்சியர்களிடம் அதனை கோரிக்கை மனுக்களாக கொடுங்கள் என கட்சி மா.செ.க்களுக்கு உத்தரவிட்டது திமுக தலைமை.

 

 BJP leader to fight DMK MPs


மேலும், முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்கும் இதனை கொண்டு செல்லும் வகையில், தலைமைச் செயலாளர் சண்முகத்தை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு. தயாநிதிமாறன், டாக்டர் கலாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சந்தித்தனர். அந்த சந்திப்பில், தலைமைச்செயலாளர் தங்களை அவமதித்துவிட்டதாக பத்திரிகையாளர்களிடம் டி.ஆர்,பாலுவும் தயாநிதியும் ஆவேசப்பட்டனர். மூன்றாம்தர மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்கிற வார்த்தைகளை பயன்படுத்தினார் தயாநிதி.

தயாநிதியின் அத்தகைய பேச்சு சர்ச்சையானது. தலித் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகள் என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். காவல்துறையில் புகாரும் கொடுக்கப்பட்டது.  இந்த நிலையில், தமிழக பாஜகவின் தலைவராக இருக்கும் முருகன், ஏற்கனவே தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக இருந்தவர். தயாநிதியின் பேட்டியை கவனித்த அவர், இது குறித்து தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களிடம் விவாதித்தார். தயாநிதி மீது வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸில் புகார் கொடுக்க வேண்டும் என முருகன் உட்பட பாஜக தலைவர்கள் தீர்மானித்தனர். அதனடிப்படையில் பாஜக பிரமுகர்கள்  நரேந்திரன், ராகவன், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் சென்னை கமிஷனர் ஏ.கே.விஷ்வநாதனை சந்தித்து புகார் கொடுத்தனர்.

 

 BJP leader to fight DMK MPs

 

இந்தநிலையில், திமுக தலைமை கண்டித்ததன் பேரில், தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார் தயாநிதிமாறன். ஆனாலும், தமிழக பாஜகவினர் இதனை ஏற்க தயாராக இல்லாத நிலையில், தமிழகம் முழுவதும் தயாநிதிக்கு எதிராகப் புகார் கொடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வன்கொடுமை சட்டத்தில் தயாநிதி கைது செய்யப்படும் வரை அவருக்கு எதிரான இந்த பிரச்சனை நீர்த்துப்போய்விடக் கூடாது என நினைக்கிறாராம் பாஜக தலைவர் முருகன். இதனால், ’’திமுக எம்.பி.க்களுக்கு எதிராக வரிந்து கட்டுவதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்’’ என்கிறார்கள் தமிழக பாஜகவினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.