Skip to main content

“முதலமைச்சரின் கைக்கூலியாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டுவருகிறது..”  சி.வி. சண்முகம்  

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

"The Anti-Corruption Department is working as a bribe to the Chief Minister." CV Shanmugam

 

முன்னாள் அமைச்சரும், அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சிவி சண்முகம் நேற்று விழுப்புரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திமுக அரசு எதிர்க்கட்சியை பழிவாங்கும் நோக்கத்தோடு மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதம் ஆன போதிலும் இன்னமும் அதிமுகவை தான் குறை சொல்லி வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அரசு நிர்வாகம் மீது துளியும் கவனம் செலுத்தவில்லை. அதிமுக மீதான பழிவாங்கும் நடவடிக்கையை செய்து வருகிறது. அதை நாங்கள் சட்டரீதியாக சந்திக்க உள்ளோம். 

 

அரசு ஊழியர்கள் தயவு இல்லாமல் திமுக ஆட்சி அமைக்க முடியாது. இதை அவர்கள் மறந்துவிட்டனர். இன்று முதலமைச்சரின் கைக்கூலியாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டுவருகிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கும்போதே, லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அதிகாரி கந்தசாமி முதலமைச்சரை சந்திக்கிறார். காரணம், வேலுமணியை கைது செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் இலக்கு. ஆனால், அதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால் வேலுமணி கைது செய்யப்படவில்லை. 

 

இந்த அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள்; அச்சுறுத்தப்படுகிறார்கள். நேற்று முன்தினம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் மிகவும் நேர்மையான அதிகாரி. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அவரை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால், அவர் அதற்கு மறுத்துவிட்டதால் பின்னர் அவர் பதவி நீக்கம்செய்யப்பட்டவர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பதினோரு லட்சம் பணம், 4 கிலோதங்கம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குக்காக அதிகாரி வெங்கடாசலம் அச்சப்படவில்லை. 

 

அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அவர் பகலில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு என்ன நடந்தது, அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது மர்மமாக உள்ளது. கடந்த மாதம் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடைபெற்று இரண்டரை கோடி பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால், அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அவருக்கு 10 நாளில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. எதிர்கட்சிகள் கேள்வி கேட்ட பின்பு அவர் கைது செய்யப்படுகிறார். முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்த வற்புறுத்தப்பட்டுள்ளார். அவர் மறுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி முன்னாள் அரசு மீது குற்றம் சுமத்த வேண்டும் என்று வலியுறுருத்தப்பட்டு அதற்கு வெங்கடாச்சலம் மறுத்ததால் அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கேள்வி எழுகிறது. 

 

எப்போதெல்லாம் திமுகவினர் மீது குற்றம்சாட்டப்படுகிறதோ அப்போதெல்லாம் அதிகாரிகள் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. மரக்காணம் ஒன்றியக் குழுத் தலைவர் தேர்தலில் அங்கு பணி செய்யும் வட்டார வளர்ச்சி அலுவலர் மிரட்டப்பட்டு தோல்வி அடைந்தவரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த அரசின் மீதும் காவல்துறை மீதும் நம்பிக்கை இல்லாததால் மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலத்தின் மர்ம மரணத்திற்கான காரணத்தை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த அரசால் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். அதனால் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.