Skip to main content

“அது என்னோட பர்ஸ்னல் மேட்டர்... இத அப்படியே விட்ருங்க...” - நைசாக நழுவிய அண்ணாமலை

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

annamalai rafale watch controversy

 

“அது என்னோட பர்ஸ்னல் மேட்டர்.. இத அப்படியே விட்ருங்க..” என, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு நைசாக பதிலளிக்கும் அண்ணாமலையை, நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

 

தமிழக பாஜக கட்சியில் நடக்கும் பல்வேறு சர்ச்சைகளால் அரசியல் களம் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. பாலியல் சர்ச்சைகள் முதல் உட்கட்சி பூசல் வரை என வெளியே வரும் ஏகப்பட்ட புகார்களால் கமலாலயம் கதிகலங்கியுள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு சர்ச்சையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிக்கியுள்ளார்.

 

அண்ணாமலை தன் கையில் கட்டியிருக்கும் வாட்சியின் விலை மட்டுமே சுமார் 4 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. தற்போது இதுதான் அண்ணாமலையின் வாட்ச் சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. போலீஸ் வேலையை ராஜினாமா செய்த அண்ணாமலை, திடீரென அரசியலில் குதித்தார். ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அண்ணாமலை, வாட்ச் மட்டும் 4 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். வாட்ச் வாங்கவே இவ்வளவு பணம் இருக்கிறது என்றால், அண்ணாமலையிடம்  எவ்வளவு பணம் இருக்கும் என சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

 

இது குறித்து அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது " என்னுடைய கையில் கட்டியிருக்கும் வாட்சியின் விலை சுமார் 3.5 லட்ச ரூபாய். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களை வைத்து செய்யப்பட்ட சிறப்பு வாட்ச் இது. ரஃபேல் விமானத்தைத் தயாரித்த அதே நிறுவனம்தான் மொத்தம் 500 வாட்ச்களை தயாரித்தது. எனக்கு ரஃபேல் விமானத்தை ஓட்டக் கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தான் இந்த வாட்சியினைக் கட்டி இருக்கிறேன்" என அண்ணாமலை பேசியிருந்தார்.

 

மேலும், அவர் கூறும்போது "இது என்னோட பர்ஸ்னல் மேட்டர். இத அப்படியே விட்ருங்க" என செய்தியாளரின் கேள்விக்கு நைசாக பதிலளித்தார். ஆனால், இதைப்பார்த்த நெட்டிசன்கள், அண்ணாமலை கையில் இருக்கும் கைக்கடிகாரம், சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்படுகிறது என்ற மற்றொரு தகவலையும் வெளியிட்டு வருகின்றனர். தற்போது, அண்ணாமலையின் வாட்ச் சர்ச்சை குறித்த தகவல், சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.