Skip to main content

 “மன்னிப்பு கேட்க முடியாது”; பதுங்கும் அதிமுக - பாயும் அண்ணாமலை

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Annamalai has said that he cannot apologize for the Anna issue

 

அண்மைக்காலமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவினருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவினர் மத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இரு கட்சித் தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்துகொண்டனர். ஒரு கட்டத்தில் அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை; அண்ணா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் எந்த பிரச்சனையும் இல்ல; வரும் தேர்தலில் மோடி தான் பிரதமராக வேண்டும். இந்தியாவிற்கு மோடி; தமிழகத்திற்கு எடப்பாடி என்று செல்லூர் ராஜு தெரிவித்தார். 

 

இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “அதிமுக - பாஜக இடையே எந்த பிரச்சனையும் இல்லை. என்னை பொறுத்தவரையில் பிரதமர் மோடியை யார் எல்லாம் ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஓரணியில் திரள வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். வேறு வேறு சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் கட்சிகள் இருக்கின்றன. அதனால் கட்சிக்குள் முட்டல் மோதல் வருவது சகஜம் தான். அதிமுகவின் சித்தாந்தம் வேறு. எங்களில் சித்தாந்தம் வேறு. நான் யாரையும் தவறாக பேசவில்லை; யாருடனும் பிரச்சனை இல்லை. அதிமுகவின் மூத்த தலைவர்களின் பேச்சுக்கு, பாஜக தேசிய தலைவர்கள் பதில் கூறுவார்கள். 

 

எனது அரசியலில் தெளிவாக இருக்கிறேன்; எனக்கு தன்மானம் முக்கியம். அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் பிரச்சனை இலை; அதிமுக தலைவர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக நினைக்கிறேன். செல்லூர் ராஜு கூறியது போல் மத்தியில் பிரதமர் மோடி, மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி என்பதை என்னால் எப்படி ஏற்று கொள்ள முடியும்? என்னை பொறுத்தவரையில் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதை கூறித்தான் நானும் தலைவர் பொறுப்புக்கு வந்தேன். அப்படி இருக்கும் போது எப்படி பழனிசாமியை முதல்வராக்குமாறு கூற முடியும்?

 

எனது அரசியல் ஆக்ரோஷமாகத்தான் இருக்கும். அதனை எல்லாம் தெரிந்துதான் என்னை மேலிடம் அனுப்பி வைத்திருக்கிறது. அதிமுக தலைவர்களின் தனி நபர் கருத்திற்கு நான் பதிலடி கொடுத்தால் நல்லா இருக்காது. அண்ணா குறித்து நான் தவறாக பேசவில்லை; சரித்திரத்தில் நடந்ததைத்தான் கூறினேன். 1998 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் ஒரு ரயில்வே விழாவில் நான் பேசிய அண்ணா பற்றிய நிகழ்வை பேசியிருப்பார்; வேண்டும் என்றால் தேடி பாருங்கள். அதனால் என்னை பொறுத்தவரையில் நான் பேசியதில் எந்த தவறுமில்லை;  உண்மையை பேசியிருக்கிறேன், அதனால் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது” என்றார்.

 

அண்ணா குறித்து அண்ணாமலை பேசியபோது இந்தி நாளிதழில் 1956 ல் நடந்த சம்பவம் குறித்து செய்திகள் வந்திருக்கிறது என்றார். ஆனால் அண்ணாமலை கூறியது போல் எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை என்று இந்து குழுமம் தற்போது விளக்கமளித்துள்ளது; இது குறித்து அண்ணாமலையிடம் கேட்டபோது, “ இந்து குழுமம் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது; அன்றைக்கு வந்த இந்து நாளிதழை எடுத்து பாருங்கள். முன்பு இருந்த இந்து நாளிதழின் ஆசிரியர் வேறு தற்போது இருக்கும் ஆசிரியர் வேறு. இந்து மட்டுமல்ல, அது போன்று வேறு சில நாளிதழ்களில் வந்திருக்கிறது” என்றார்.

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு - பிரதமர் மோடி ஆறுதல்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

 Migjam storm damage- Prime Minister Modi consoles

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'மிக்ஜாம் சூறாவளியால், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பேரிடர் மீட்புப்படையினர் அயராது உழைத்து வருகின்றனர். நிலைமை முழுமையாக சீராகும் வரை தங்கள் பணி தொடரும்' என தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடைக்கால நிவாரணமாக 5060 கோடி ரூபாய் நிதி கேட்டு பிரதமர் கடித்தும் எழுதியுள்ளதும், 'புயல் பாதிப்புகளில் இருந்து இன்னும் சென்னை மீளாத நிலையில், ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை நடத்தும் யூஜிசி - நெட் தேர்வுகள் பல மையங்களில் நடக்கிறது. தேர்வு தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்' என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடசன் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

‘அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Chennai High Court verdict on Sasikala's removal from ADMK will go away

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில், சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

 

அப்போது சசிகலா தரப்பில் கூறியதாவது, “அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்து பொதுச் செயலாளர் ஆன சசிகலாவை பதவியில் இருந்து நீக்கியது செல்லாது. இது தொடர்பான நடைமுறையே சட்ட விரோதமானது. கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கவோ அல்லது கட்சி விதிகளில் மாற்றம் செய்யவோ அதிகாரம் இல்லை என்று தெரிவித்தது. இதை தொடர்ந்து, நீதிபதிக்கும், சசிகலா தரப்புக்கும் காரசார வாதம் நடைபெற்றது.  

 

இதனை தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “ கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர்களாக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தற்போது வரை தொடர்கிறார்கள். அதனால்,  இடைக்கால பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை நீக்கியது செல்லும்” என்று கூறினார். 

 

அதே போல், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், “பொதுக்குழு கூட்டங்கள் கட்சி விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டது. அந்த கூட்டங்கள் செல்லும் என்பதை உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து உள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் அடிப்படையிலேயே சசிகலா கட்சியில் இருந்தும், பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்” என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து கடந்த மாதம் உத்தரவிட்டனர். 

 

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று (05-12-23) பிறப்பித்தனர். அதில், வி.கே.சசிகலா தொடர்ந்திருந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும், சிவில் கோர்ட் உத்தரவை உறுதி செய்வதாகவும் தீர்ப்பளித்தனர். மேலும், அந்த தீர்ப்பில், “அ.தி.மு.க.வில் பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் படைத்த அமைப்பு என்பதால் அதில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு ஏற்புடையதல்ல. எனவே, மனுதாரரான சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்