Skip to main content

சி.வி.சண்முகம் உட்பட அதிமுகவை கடுமையாக தாக்கி பேசிய அண்ணாமலை! 

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

Annamalai Condemn ADMK including CV Shanmugam!

 

பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ போன்றவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதேபோல், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் அண்ணாமலையை விமர்சித்திருந்தார். 

 

விழுப்புரத்தில் நடந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், “சரித்திரம் தெரியாமல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான், இன்றைக்கு புதிது புதிதாக எல்லாம் தலைவர்கள் வந்துள்ளார்கள். அண்ணாமலை அண்ணாவை விமர்சனம் செய்து பேசியதுடன் தரக்குறைவாகவும் பேசி உள்ளார்” என்று தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “அண்ணாவுக்கு ஆதரவாக வருபவர்கள் அண்ணாவின் வழி நடந்துகொள்கிறார்களா. அப்படி நடந்தால் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். கருத்தை கருத்தாக மட்டுமே பார்க்கவேண்டும். சரித்திரத்தை மறைத்து பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பா.ஜ.க. யாரையும் கடவுளாக பார்ப்பவர்கள் அல்ல; எங்களை பொறுத்தவரை எல்லோரும் மனிதர்கள்தான். முத்துராமலிங்க தேவர் சனாதனத்திற்காக என்ன பேசினார் எனச் சொல்வது எனது கடமை. இன்னும் 50 வருடத்தில் சரித்திரத்தை மாற்றி எழுதிவிட்டீர்கள் என்றால் பிறகு சரித்திரத்தை படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள். மதுரை மீனாட்சி அம்மன் குறித்து இழிவாக பேசும்போது முத்துராமலிங்க தேவரின் கருத்து என்பதை நான் பதிவு செய்ய வேண்டும். யாரும் கடவுள் கிடையாது அனைவரும் மனிதர்கள் அப்படியான அரசியல் பாரம்பரியத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன். எனக்கு அடைமொழி கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் காரணம் நான் மனிதன். 

 

அண்ணாவை நான் எங்கும் தவறாக பேசவில்லை. சரித்திரத்தில் அந்த சம்பவத்தை நான் எடுத்துக்காட்டியுள்ளேன். அதில் முத்துராமலிங்க தேவர் என்ன பேசினார் என்பதை நான் சொல்லியிருக்கிறேன். நான் யாரின் அடிமையும் கிடையாது. அதேபோல், யாரும் எங்களின் அடிமையும் கிடையாது. நான் சொல்லும் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது. 

 

தனிக் கட்சி, தனி கொள்கை, சனாதன தர்மம் எங்கள் உயிர் மூச்சு. அதனைத் தற்காக்க முடியவில்லை என்றால் நான் ஏன் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் இருகையில் அமர வேண்டும். சனாதன தர்மத்தைப் பற்றி பேசும்போது நான் உண்மையைப் பேசுவேன். 

 

இன்னும் பல விஷயங்களை சொல்ல முடியும். பெரியார் அடிவாங்கியதையும், அப்பொழுது அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் இருந்ததை எல்லாம் சொல்லமுடியும். ஆனால், நான் அதற்குள் எல்லாம் போகவிரும்பவில்லை. சரித்திரத்தை சரித்திரமாக பாருங்கள். 

 

இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் என்னிடம் ஆகாது. நான் மரியாதை கொடுத்து அரசியல் நடத்துவேன். எனக்கும் கடும் சொற்கள் வரும். சி.வி.சண்முகம், மாலை ஆறு மணிக்கு முன்பாக ஒரு மாதிரியும், அதற்கு பிறகு ஒரு மாதிரியும் பேசுவார். ஆனால், அதனை நான் பேச விரும்பவில்லை. 10 ஆண்டுகள் காவல்துறையில் துப்பாக்கி பிடித்த கை இது. அதனால், நேர்மையை குறித்து சி.வி.சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது. அவர் அமைச்சராக இருக்கும்போது என்னென்ன செய்தார் என்பது எனக்கு தெரியும்; அதற்குள் நான் போக விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை என் நேர்மையை கொச்சைப்படுத்தினால் யாராக இருந்தாலும் விடமாட்டேன். இது தன்மானம் பிரச்சனை. பா.ஜ.க. சுயமரியாதை இருக்கக் கூடிய கட்சி. யார் காலில் விழுந்தும் இந்தக் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் இல்லை. 

 

கூட்டணி முக்கியம்; நான் அதிமுக மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. பாஜகவுக்கு விரோதமான கட்சி என்றெல்லாம் சொல்லமாட்டேன். அது அவர்களின் கொள்கை; இது எங்களின் கொள்கை. அடிப்படையில் அதிமுகவின் கருத்தை பாஜகவும், பாஜகவின் கருத்தையும் அதிமுகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இரண்டு கட்சியையும் ஒன்றாக்கிவிடலாமே. கூட்டணியில் இருந்தால் கொள்கை மாறுபாடுகள் இருக்கும். அதற்காக அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது முடியாது. இதனை ஆறு மாதமாக மிக தெளிவாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். 

 

கூனி கும்பிட்டு அதிகாரத்திற்கு வரவேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு கிடையாது. நீங்கள் எல்லோரும் எப்படி அமைச்சராக இருந்தீர்கள் என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். அதனைப் பற்றியெல்லாம் நான் பேசட்டுமா? 

 

சி.வி.சண்முகம் ஒரு விஷயத்தை பேசும்போது உணர்ந்து பேச வேண்டும். அரசியலில் சீனியர் ஜூனியர் எல்லாம் ஏது? அரசியலில் எந்த வயதில் வேண்டுமானாலும் பக்குவம் வரலாம். அண்ணாமலை புதுசு; நான் 50 வருடமாக அரசியலில் இருக்கிறேன் என்கிறார்கள். அதற்காக உங்கள் காலில் விழ வேண்டுமா? அப்படியெல்லாம் விழ முடியாது. இது என்னுடைய அரசியல், பாணி, என் ஸ்டைல். இது இப்படி தான் இருக்கும். இஷ்டம் இருப்பவர்கள் உடன் இருங்கள். 

 

நான் யாரையும் எங்கையும் அவமானப்படுத்தவில்லை. குறைந்தும் மதிப்பிடவில்லை. ஆனால், வரலாற்றை வரலாறாகத்தான் பேசவேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. 2024 தேர்தல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தேர்தல். 2026 தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும் என்பது அதனை அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம். யாருக்கும் பா.ஜ.க. தலைவணங்காது” என்றார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

''அமலாக்கத்துறையை வைத்து தேர்தலுக்கு பணம் வசூலிக்கும் பாஜக''-முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி குற்றச்சாட்டு 

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

former MLA Balabharti accused of collecting money for elections using the enforcement department

 

திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவரிடம் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற புகாரில் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் மாவட்டச் செயலாளர் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

 

செய்தியாளர்களிடம் பேசுகையில், ''வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேவையான பணத்தை வசூலிப்பதற்காக பாஜக அமலாக்கத்துறையை தற்பொழுது பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை மத்திய அரசின் அடியாள் துறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதி அளிக்காமல் துணை ராணுவத்தை அலுவலகம் முன்பு கொண்டுவந்து நிறுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் சோதனை செய்ய அனுமதி அளிக்க முடியாது எனக் கூறுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. விசாரணை செய்ய காவல்துறையினர் வருகை தந்தால் அவர்களை அனுமதிப்பது தான் ஜனநாயக முறையாகும். ஆனால் அனுமதிக்க முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

இது அராஜக போக்காகும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய  அமலாக்கத்துறை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தான் நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவிடம் பேசியுள்ளார். உள்துறை அமைச்சகத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி எப்படி இவ்வாறு பேச முடியும். ஆகவே உள்துறை அமைச்சகத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளது. ஆகவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இது சாதாரண விஷயம் இதனை அரசியல் ஆக்காதீர்கள் லஞ்சம் வாங்குவது என்பது அனைத்து துறைகளிலும் உள்ளது என பொதுப்படையாகக் கூறி வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மத்திய அரசையும், அமலாக்கத்துறையும் காப்பாற்றும் விதமாக பேசி வருகிறார். மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேர்தல் செலவுக்காக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மேலும் மாநில அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது'' என்று கூறினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

தேர்தல் முடிவு எதிரொலி- 'இந்தியா' கூட்டணி வெளியிட்ட திடீர் அறிவிப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Election result reverberation - sudden announcement made by 'India' alliance

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 42 இடங்களிலும், பாஜக  9 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 154 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 72 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 106 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 76 இடங்களிலும், மற்றவை 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 45 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நாளை மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

5 மாநில தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா அல்லது இல்லையா என்பது தொடர்பான கருத்துக்கள் எழுந்து வருகிறது.  5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை மல்லிகார்ஜுன கார்கே கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்