Skip to main content

அமைதிப்படை அமாவாசை... சீமான் பேச்சு... 

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 
 

அப்போது அவர், இந்த துரோகிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று டிடிவி தினகரன் தெரு தெருவாய் பேசி வருகிறார். இந்த துரோகிகளை உருவாக்கிவிட்டத யார்? எடப்பாடி முதல்வர் என்று சசிகலா சொன்னபோது, அண்ணன் அமைதிப்படை சத்தியராஜைப்போல மண்டியிட்டு வந்தார். மோடிக்கும் எடப்பாடிக்கும் வித்தியாசம் கிடையாது. அத்வானி மிகப்பெரிய தலைவராக இருந்தபோது, அவரை மோடி கும்பிட்ட படமெல்லாம் இருக்கிறது. பாருங்கள். இதற்கு மேல் ஒருவர் குனியமுடியாது அப்படி குனித்து கும்மிட்டுவிட்டு, பிரதமரானதும் அத்வானியை கண்டுகொள்ளாமல் போகிறார். இதுதான் அமைதிப்படை அமாவாசை.


 

seeman speech


சசிகலா உட்கார்ந்திருக்கிறார். எடப்பாடி என்று சொல்லுகிறார். அவர் எங்கே என்று எல்லோரும் தேடுகிறார்கள். அவர் மண்டியிட்டு வருகிறார். சசிகலா அம்மாவுக்கே வெட்கம் வந்து அந்த அம்மாவே சட்டென எழுந்து, பாவம் ரொம்ப பெரியவர் இப்படிக் கிடக்கிறாரே என்று அவரை எழுப்பி தட்டிக்கொடுக்கிறார்.  முதல் அமைச்சர் பதவியில் உட்கார்ந்த உடனேயே, நீயா எனக்கு சீட்டு கொடுத்தாய், நீயா எனக்கு ஓட்டு கேட்டாய், நீ என்ன செய்தாய் எனக்காக என கேட்டார் எடப்பாடி. இவர்களை ஒழிக்காமல் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது. 

 

பணக் கொழுப்பில் அள்ளி இறைத்து எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிகப்பட்சம் ஆறு மாதம் வண்டி ஓட்ட மாட்டார்கள். இதற்கும் சேர்த்து மறுபடியும் தேர்தல் வரப்போகிறது. மேல பாஜக மீண்டும் வரவில்லை என்றால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கதைகளெல்லாம் முடிந்தது. ஓ.பி.எஸ். இப்பவே புலம்பி தீர்க்கிறார். என் மகனுக்கு மந்திரி பதவி கொடுங்க, என்னால இங்க இருக்க முடியல என புலம்புகிறார். இவ்வாறு பேசினார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.