Skip to main content

''இவையெல்லாம் தான்தோன்றித்தனமாக இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் எடுக்கும் முடிவுகள்''- புகழேந்தி பேட்டி

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

'' All of these decisions are made spontaneously by the EBS and the corresponding OBS '' - Pukahendi interview

 

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் புகாரளித்த நிலையில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''8 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் 15 ஆயிரம் கொடுத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தார்கள். கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டது. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நாங்கள் நேர்காணல் நடத்துவோம் என்று சொல்லிப் பணம் வாங்கியுள்ளனர். திமுக நேர்காணல் நடத்தியிருக்கிறது. மற்ற கட்சிகள் எல்லாம் நடத்தியிருக்கிறது பார்த்திருப்பீர்கள். ஆனால் இவர்கள் யாரிடமும் நேர்காணல் நடத்தவில்லை. பப்ளிக் மீட்டிங் போன்று எல்லோரையும் கூட்டி சில மணிநேரங்களில் அந்தக் கூட்டத்தை முடித்து, அவர்களாகவே வேட்பாளர்களை அறிவித்துக்கொண்டார்கள் என்பது முக்கியமான புகார். ஆட்சிமன்றக் குழு கூட்டப்படுவதே இல்லை. அதுதான் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

 

சில முக்கிய முடிவுகளை அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் சேர்ந்து எடுக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் செய்யாமல் தான்தோன்றித்தனமாக இபிஎஸ்சும், அவருக்கு ஒத்துப்போகின்ற ஓபிஎஸ்சும் எடுக்கின்ற முடிவுகள்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு, நேற்று (30.11.2021) அன்வர் ராஜாவை எடுத்தார்கள். என்னை அதற்குமுன்பே எடுத்தார்கள். எந்தக் காரணமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தூக்கி எறிகிறார்கள். சீனியராக இருக்கட்டும், யாராக இருந்தாலும் பரவாயில்லை என நீக்கிவிடுகிறார்கள். இதற்குக் காரணம் எல்லாம் கிடையாது. அவர்கள் வைத்ததுதான் சட்டம். அதிமுகவில் கட்சி விதிகளைத் திருத்தியது சட்டத்திற்கு முரணானது'' என்றார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.