





Published on 13/05/2021 | Edited on 13/05/2021
சென்னையில் இன்று கரோனா தடுப்புப்பணிகள் குறித்து ஆலோசிப்பதற்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், அதிமுக சார்பில் ஜெயக்குமார், பாமக சார்பில் ஜி.கே.மணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கரோனா நிவாரண பணிகள் குறித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.