Skip to main content

வெளிநடப்பு செய்த அதிமுக (படங்கள்) 

Published on 18/03/2022 | Edited on 18/03/2022

 


2022-2023ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யப்பட்டது. பேரவை துவங்கி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கிய நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது, எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல் காரணமாக அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் அறிவுறுத்தியபோதிலும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் உரைக்கு முன் பேச வாய்ப்பளிக்காததால் இறுதியில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். 

 


 

சார்ந்த செய்திகள்