Skip to main content

நடிகர் விஷால் நண்பர் மீது கடத்தல் - அடிதடி - கந்து வட்டி வழக்கு பதிவு! -போலீஸ் தேடுவதால் தலைமறைவு!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

Tiruchirappalli

 

 

கந்து வட்டி கொடுமைகளை பத்தி சினிமாவில் ‘கனா கண்டேன், தடையறத் தாக்க’ ஆகிய திரைப்படங்களில் கந்துவட்டியின் உக்கிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி இருப்பார்கள். அதே சினிமா நடிகர்களே கந்துவட்டி கொடூரர்களாக வலம் வருவது இன்னும் கொடுமையான விசயம்.

 

கந்துவட்டி கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஜெ. அரசு கந்துவட்டிக்கு எதிராக குண்டர் சட்டம்  கொண்டுவந்தது. ஆனாலும் தனிகாட்டு ராஜாவாகவும், அடிதடி ரவுடிகளின் துணையோடு வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். 

 

சினிமா நடிகர் அலெக்ஸ் ஒரு காலத்தில் திருச்சி ரயில்வே தொழிலாளர்களுக்கு வட்டி கொடுக்கும் தொழில் நடத்தி வந்தாலும், அவர் கால போக்கில் மாஜிக் கலைஞராக மாறி உலக புகழ்பெற்று மறைந்தார். 

 

அதன் பிறகு அவருடைய மருமகன் ஜெரால்டு மில்டன் அதிமுக கட்சியில் இணைந்து அதிமுக கவுன்சிலராக மாறி அந்த அரசியல் பலத்துடன் தொடர்ச்சியாக கந்துவட்டி கொடுமை, டார்ச்சர் குறித்து புகார் வந்து வழக்கு பதிவு செய்தாலும் தன்னுடைய உச்சகட்ட சினிமா, ரவுடிகளின் பலத்தில் தொடர்ச்சியாக இந்த தொழிலை செய்து கொண்டு இருக்கிறார். 

 

 

Nakkheeran AD

 

உச்சகட்டமாக கடந்த 2012ம் ஆண்டு திருவரம்பூரில் உள்ள காந்திநகரில் வசித்த ராகுல் என்கிற பெயரில் மினரல்வாட்டர் கம்பெனி நடத்திய சரவணன் என்பவர் "வாங்கினது நாங்க அஞ்சு லட்சம்தான்.... இன்னிக்கி 25  லட்ச ரூபாய் என்னை கட்டு..கட்டு... கட்டு... கட்டு... கட்டு... கட்டு... கட்டுனு டார்ச்சர் பண்ண, தன்னுடைய காரில் தற்கொலை செய்து கொண்டு இதற்கு காரணம் நடிகர் ஜெரால்டு மில்டன் என்று லைவ் வீடியோ வெளிட்டது தமிழகத்தையே உலுக்கியது அந்த வீடியோ. அந்த வழக்கில் தன்னுடைய அதிகாரபலத்துடன் ஈசியா வெளியே வந்தார். 

 

இதன் பிறகு சினிமாவில் பாண்டவர் அணியில் நடிகர் விஷாலுடன் இணைந்து சினிமாவுக்குள் விஷாலுக்கு மிக நெருக்கமான நபராக மாறி சினிமாவில் பல படங்களுக்கு வட்டி தொழில் மூலம் சிறப்பாக வலம் வருகிறார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வட்டி டார்ச்சர், கடத்தல், அடிதடி வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ளார்.

 

இது குறித்து புகார் கொடுத்த ஆறுமுகத்திடம் பேசியபோது, ''திருச்சி கொட்டப்பட்டு ஐஸ்வர்யா நகர் எங்க ஏரியா. ரயில்வே தொழிலாளியான எனக்கு உடல் நிலை சரியில்லை. பைபாஸ் சர்ஜரி பண்ண பணத் தேவை இருந்ததால் குறைந்த வட்டி என்று என்னை கூட்டிக்கொண்டு போய் அதிமுகவின் முன்னாள் கவுன்சிலரும், நடிகருமான ஜெரால்டிடம் விட்டார்கள். நான் கடந்த 2019ஆம் ஆண்டு 35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். வாங்கும் போது தான் தெரிந்தது 10 ரூபாய் வட்டி, கூட்டு வட்டி, பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள். அப்போதே எனக்கு கொஞ்சம் யோசனையாக தான் இருந்தது.

 

நான் தொடர்ந்து வட்டி கட்டி வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக இருந்தால் என்னால் வட்டி கொடுக்க முடியவில்லை. அவர்களிடம் எங்க பணிமனையில் 160க்கு பேருக்கு மேல் வாங்கியிருக்கிறார்கள். அவர்களிடம் இது பற்றி விசாரித்த போது அவர்கள் சொன்ன கதைகளை கேட்டு மிரட்டு போயிட்டேன்.

 

இந்நிலையில் நான் பொன்மலையில் கடந்த சனிக்கிழமை வேலையை விட்டு வெளியே வந்த போது 3 பேர் கொண்ட கும்பல் டூவிலரில் அசிங்கமாக திட்டி கட்டாயப்பத்தி கடத்தி சென்று திருச்சி தென்னுர் பகுதியில் ஜெரால்டுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் அடைத்து வைத்து வட்டியுடன் சேர்த்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் பணம் திரும்பி தர கேட்டு சரமாரியாக தாக்கினார்கள். (இந்த அலுவலகம் தான் வட்டி வசூல் செய்யும் அலுவலகம் என்பது குறிப்பிடதக்கது).

 

எனக்கு உடல்நிலை மோசமான நிலையில் இருந்தும் அவர்கள் அதை கண்டு கொள்ளாமல் என்னை அடிப்பதிலேயே குறியாக இருந்தார்கள். கடைசியில் அவர்களிடம் நீங்கள் கேட்கும் பணத்தை ரெடி பண்ணி தருகிறேன் என்று கெஞ்சி காலில் விழுந்து 20ம் தேதிக்குள் பணத்தை தருவதாக சொல்லி தப்பித்து கம்யுனிஸ்டு கட்சி துணையுடன் இந்த விவகாரம் குறித்து பொன்மலை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசிடம் புகார் கொடுத்தேன். அதன் பிறகு வழக்கு பதிந்துள்ளனர். எனக்கு இப்போ உயிர் பயம் உள்ளது'' என்கிறார். 

 

Tiruchirappalli

 

இந்த பிரச்சனை குறித்து சி.பி.எம். கட்சியின் பொன்மலை பகுதி செயலாளர் கார்த்தியிடம் பேசினோம். ''இந்த கந்து வட்டி கடத்தல் குறித்த புகாரில்  தற்போது பொன்மலை இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசுக்கு பிரஷர் வந்து எதற்கும் பயப்படாமல் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த பொன்மலை பணிமனையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கந்துவட்டி கொடுமையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் எல்லாம் வெளியே சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது குறித்து தமிழக அரசு தலையிட்டு சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் எங்கள் அமைப்பின் மூலம் இந்த கந்துவட்டி தொழிலில் பாதிக்கப்பட்டவர்களை திரட்டி புகார் கொடுக்க உள்ளோம்.

 

புகாரின் பேரில் நடிகர் ஜெரால்டுமில்டன், மரியம் நகரை சேர்ந்த ஜெஸ்டின் ஜெயராஜ், பாலக்கரை விசு ஆகியோர் மீது வழக்கு பதிந்து முதல் கட்ட நடவடிக்கையாக ஜெஸ்டின் ஜெபராஜ் கைது செய்யப்பட்டு உள்ளார். வழக்கு பதிந்தவுடன் வழக்கம் போல் தலைமறைவாகியுள்ளார் நடிகர் ஜெரால்டுமில்டன்.

 

கைது செய்யப்பட்ட ஜெஸ்டின் ஜெபராஜ் சென்னையை சேர்ந்த நபர், இவர் சென்னையில் இதே போன்ற வழக்கில் சம்மந்தப்பட்டவர். நடிகர் ஜெரால்டுமில்டனிடம் பணியுரியும் கந்துவட்டி வசூல் கும்பல் பெரும்பாலும் வெளியூர் நபர்கள் என்பது குறிப்பிடதக்கது.

 

பெரும்பாலும் கந்துவட்டி பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வெளியே சொல்ல பயப்படுவார்கள். ஆறுமுகம் போன்ற சமூக அக்கறை உள்ளவர்கள் தைரியமாக வெளியே சொல்லும் போது காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மர்மம் விலகாத மாணவியின் மரணம்! சாலை மறியலில் பெற்றோர்! திருச்சியில் பரபரப்பு!

Published on 20/01/2021 | Edited on 20/01/2021
ddd


திருச்சி சமயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனலெட்சுமி இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லூரியின் மாணவிகள் விடுதியில் ராஜேஸ்வரி என்ற மாணவி மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 


அரியலூர் மாவட்டம் கருப்பூா், பொய்யூா் கிராமத்தை சோ்ந்த விவசாயி ராமையாவின் மகள் ராஜேஸ்வரி இரண்டாம் ஆண்டு இளங்களை பார்மா படிப்பை விடுதியில் தங்கி பயின்று வருகிறார். வழக்கம்போல பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு சென்று வந்த மாணவி ராஜேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை  (17.01.2021) மாலை விடுதிக்கு வந்துள்ளார். 

 

திங்கட்கிழமை செமஸ்டா் தோ்வு என்பதால் 18.01.2021 விடியற்காலை 1 மணி வரை சக தோழிகளுடன் அறையில் அமர்ந்து படித்து வந்துள்ளார். இரவு வெகு நேரம் படித்ததில் அவரோடு படித்து கொண்டிருந்த 7 தோழிகளும் அவா்களுடைய அறைக்கு சென்ற நிலையில், அதன்பிறகு ராஜேஸ்வரிக்கு என்ன நடந்தது என்று அவிழ்க்கப்படாத முடிச்சாக உள்ளது. 

 


திங்கட்கிழமை விடிந்த பிறகு கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்த ராஜேஸ்வரியின் தோழிகள் அவரை அறையில் வந்து தேடி பார்த்துவிட்டு சென்றுள்ளனா். காலை 8.45 மணிக்கு விடுதி கட்டிடத்தின் தரை தளத்தில் காயங்களுடன் கிடப்பதை பார்த்த விடுதி மாணவிகள் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். 


அவா்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் முன்பு அவரை எஸ்.ஆா்.எம். மருத்துவ கல்லூரிக்கு தூக்கி சென்றுள்ளனா். ஆனால் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் கிடைத்த நிலையில், கல்லூரி நிர்வாகம் மாணவி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். 


இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் காவல்துறையினா் பெண்ணின் உடலை நிர்வாகத்திடம் இருந்து கைப்பற்றி திருச்சி ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி ராஜெஸ்வரி இறந்து கிடந்த பகுதியை கல்லூரி நிர்வாகம் கழுவி விட்டிருந்த நிலையில், எந்தவித தடயமும் கிடைக்காமல் காவல்துறை ஒருபக்கம் திணறி வருகிறது. 

 

மற்றொரு பக்கம் கல்லூரி நிர்வாகம் தன்னுடைய பெண்ணை கொன்றுவிட்டதாக புகார் தெரிவித்துள்ள நிலையில், ராஜேஸ்வரியின் பெற்றோர் மற்றும் உறவினா்கள், பெண்ணின் உடற்கூறு பரிசோதனையை தலைமை மருத்துவமனையில் வைத்து செய்ய வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்ததையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் இருந்து திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 


இதற்கிடையில் கல்லூரி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று கல்லூரி நிர்வாகம் முன்பு மறியல் போராட்டத்தில் உறவினா்கள் ஈடுபட்டனா். கல்லூரி நிர்வாகம் ராஜேஸ்வரி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவலை கொடுத்திருந்த நிலையில் பெண்ணின் உடம்பில் எந்தவித எலும்பு முறிவுகளும் ஏற்படாமல் கழுத்து நெறிக்கப்பட்டு, தாடை பகுதியிலும், தொடைப்பகுதியிலும் சில இரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால், பெரிய சந்தேகத்தை காவல்துறைக்கு ஏற்படுத்தி உள்ளது. 

 

எனவே மாணவியின் மரணம்  தற்கொலை அல்ல, கொலை என்ற கோணத்தில் காவல்துறையும் தன்னுடைய விசாரணையை துவங்கியுள்ளது. இரவு 1 மணிக்கு பிறகு என்ன நடந்தது என்பதற்கான எந்தவித சிறிய தடயமும் கிடைக்காததால் விசாரணையில் சற்று தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதற்கு காரணம் பெண்கள் விடுதி என்பதால் கேமராக்கள் பொருத்தப்படாமல் இருப்பது ஒரு முக்கிய காரணம். 

 

மாணவி தரப்பினர் கூறும்போது, மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்று நிர்வாகத்தரப்பில் சொல்வது முரண்பாடான கருத்தாக உள்ளது. எனவே விரைவில் மா்ம முடிச்சுகள் விலகும், காவல்துறை இந்த வழக்கை புதிய கோணத்தில் கையாண்டு குற்றவாளிகளை பிடிக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.

 

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, முதல் சந்தேகம் கல்லூரி நிர்வாகம் எந்தவித தகவலும் காவல்துறைக்கு தெரிவிக்காமல் அவா்களே மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனா். 

 

இரண்டாவது கல்லூரி நிர்வாகம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவா் விழும்போது சுவரை ஒட்டியே விழுந்ததாகவும் கொடுத்த தகவலிலும் ஒரு முரண்பாடு உள்ளது. பொதுவாக மேலிருந்து கீழே குதிக்கும்போது கட்டிடத்தில் இருந்து சில அடி தூரம் தள்ளி விழுவார்கள் ஆனால் நிர்வாகம் சுவரை ஒட்டியே விழுந்ததாக கூறுகின்றனா்.


அதேபோல் மேலிருந்து கீழே வந்து விழும் வேகத்தில் உடம்பில் ஏதாவது ஒரு பகுதியாவது முன் மண்டை பகுதி அல்லது பின் மண்டை பகுதி அடிபடும், ஆனால் இந்த பெண்ணில் தலையில் சிறிய காயம் கூட இல்லை. எனவே இது ஒரு சந்தேகம் ஏற்படுகிறது. எனவே எதுவாக இருந்தாலும் முழுமையான உடற்கூறு ஆய்வு தகவல் அறிக்கை வந்த பிறகு உரிய விசாரணை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பெண்ணின் உறவினா்கள் கல்லூரியினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராம், டிஐஜி ஆனி விஜயா இருவரும் பெற்றோரிடம் பேசி சமாதானம் செய்து வைத்தனர். மருத்துவ அறிக்கை வந்த உடன் கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றம் இருப்பின் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்றும், எனவே இந்த மாணவியின் மரணம் குறித்து விசாரிக்க டிஎஸ்பி தலைமையிலான ஒரு தனிப்படை அமைத்திருக்கிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று மாணவியின் பெற்றோரிடம் உறுதியளித்ததாக கூறினார்கள்.

 

 


 

Next Story

சுவர் ஏறி குதித்து திருட முயற்சி... புரட்டி எடுத்த பொதுமக்கள்... சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு...

Published on 26/12/2020 | Edited on 26/12/2020
ddd

 

திருச்சி அல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் வசித்து வரும் நிலையில் அவருடைய வீட்டில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் 2 வாலிபர்கள் திருடுவதற்காக முயன்று வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளனர். 

 

அதை அறிந்த வெங்கடேசன் சத்தம் போட்டதில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் பிடிக்க முயற்சி செய்தனர். அதில் அரவிந்த் என்பவர் தப்பித்து செல்ல தீபு என்ற வாலிபர் சிக்கினார். இவர்களைக் குறித்து பொதுமக்கள் விசாரித்ததில் அவர்கள் இருவரும் திருவனந்தபுரம் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் தீபு கையில் வைத்திருந்த கத்தியால் பொதுமக்களை மிரட்ட அவர்கள் தீபு வை சரமாறியாக தாக்கியுள்ளனர்.  தாக்கியதில் படுகாயம் அடைந்து தீபுவை பொதுமக்களே திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

 

மேலும் தப்பி சென்ற அரவிந்தை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தீபு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.