rape

Advertisment

மேற்கு வங்க மாநிலத்திலுள்ள கங்கா பிரசாத்பூர் என்ற கிராமத்தில் அவிஜித் பிஸ்வாஷ் என்ற 20 இளைஞர் ஒருவர், 100 வயது முதிய பெண்ணை ஒரு அறையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்த பாட்டியின் அழுகை சத்தம் கேட்டு உறவினர்கள் அந்த அறைக்கு வந்தனர். உறவினர்கள் வந்ததை தெரிந்துகொண்ட அந்த இளைஞன் கட்டிலுக்கு கீழே சென்று ஒழிந்து கொண்டுள்ளான். பின்னர், அங்கே இருந்த முதியவரின் உறவினர்கள் அந்த இளைஞனை பிடித்து போலிஸாரிடம் பிடித்து கொடுத்தனர். உறவினர்கள் கொடுத்த புகாரில் போலிஸார் அந்த இளைஞன் மீது வழக்குபதிவு செய்து, கைது செய்துள்ளனர். இறுதியாக கலியாணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 2 வாரம் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.