Skip to main content

இளம் பெண்ணின் வலையில் சிக்கிய அரசியல் தலைவர்கள்; அம்பலமாகும் உண்மைகள்

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

Young woman extorts money from political leaders Odisha
 அர்ச்சனா நாக்

 

ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு எளிய கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சனா நாக். இவருக்கு 26 வயதாகிறது. குடும்ப வறுமை காரணமாக, கடந்த 2018 ஆம் ஆண்டில், தனது தாயுடன் புவனேஷ்வருக்கு குடியேறிய அர்ச்சனா, வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். குடும்ப செலவுக்கு பணம் வேண்டும் என்பதற்காக அப்பகுதியில் இருக்கும் பியூட்டி பார்லர் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது, ஜெகபந்த் என்பவருடன் அர்ச்சனாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு, காதலாக மாறிய நிலையில், இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அர்ச்சனாவின் கணவர் ஜெகபந்து, பழைய கார்களை விற்கும் தொழிலை செய்து வருகிறார். இதனால், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது.

 

Young woman extorts money from political leaders Odisha

 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அர்ச்சனா, வசதி படைத்தவர்கள் மற்றும் பிரபலமானவர்களுடன் நெருக்கமாகப் பழகிவந்துள்ளார். மேலும், அவர்களுடன் சில இளம் பெண்களையும் பழக வைத்துள்ளார். அப்போது, பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் முக்கிய புள்ளிகளின் புகைப்படங்களை ரகசியமாகப் படம் பிடித்த அர்ச்சனா, அதை வைத்து, மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார். இப்படி 30க்கும் மேற்பட்டவர்களைப் படம் பிடித்து மிரட்டிய அர்ச்சனா மற்றும் ஜெகபந்த் தம்பதியினர் 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.30 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது.

 

இது குறித்து அடிக்கடி சர்ச்சைகளும், புகார்களும் எழுந்தாலும் அர்ச்சனாவின் பண பலத்தால், அவை வந்த வேகத்தில் மறைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தான், திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் அர்ச்சனா மீது மோசடி புகார் அளித்திருந்தார். அவரை தொடர்ந்து, தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதாக, இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பிறகுதான் இந்த விஷயம் பூதாகரமாக வெடிக்க தொடங்கியது

 

அந்தரங்க வீடியோக்களை வைத்து பலரிடமும் பணம் பறித்துவந்த அர்ச்சனாவுக்கு அவரது கணவர் ஜெகபந்த் உடந்தையாக இருந்தது போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து,  அர்ச்சனாவையும் ஜெகபந்த்தையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த மோசடி தம்பதியினரின் வீட்டில் இருந்து 4 செல்போன்கள், 2 டேப்லெட்டுகள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை போலீசார் ஆய்வு செய்தபோது ஒடிசா மாநிலத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உள்பட 25 க்கும் மேற்பட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், இந்த மோசடி வலையில் விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால், இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.