Skip to main content

இளம் பெண்ணின் வலையில் சிக்கிய அரசியல் தலைவர்கள்; அம்பலமாகும் உண்மைகள்

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

Young woman extorts money from political leaders Odisha
 அர்ச்சனா நாக்

 

ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு எளிய கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சனா நாக். இவருக்கு 26 வயதாகிறது. குடும்ப வறுமை காரணமாக, கடந்த 2018 ஆம் ஆண்டில், தனது தாயுடன் புவனேஷ்வருக்கு குடியேறிய அர்ச்சனா, வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். குடும்ப செலவுக்கு பணம் வேண்டும் என்பதற்காக அப்பகுதியில் இருக்கும் பியூட்டி பார்லர் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது, ஜெகபந்த் என்பவருடன் அர்ச்சனாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு, காதலாக மாறிய நிலையில், இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அர்ச்சனாவின் கணவர் ஜெகபந்து, பழைய கார்களை விற்கும் தொழிலை செய்து வருகிறார். இதனால், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது.

 

Young woman extorts money from political leaders Odisha

 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அர்ச்சனா, வசதி படைத்தவர்கள் மற்றும் பிரபலமானவர்களுடன் நெருக்கமாகப் பழகிவந்துள்ளார். மேலும், அவர்களுடன் சில இளம் பெண்களையும் பழக வைத்துள்ளார். அப்போது, பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் முக்கிய புள்ளிகளின் புகைப்படங்களை ரகசியமாகப் படம் பிடித்த அர்ச்சனா, அதை வைத்து, மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார். இப்படி 30க்கும் மேற்பட்டவர்களைப் படம் பிடித்து மிரட்டிய அர்ச்சனா மற்றும் ஜெகபந்த் தம்பதியினர் 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.30 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது.

 

இது குறித்து அடிக்கடி சர்ச்சைகளும், புகார்களும் எழுந்தாலும் அர்ச்சனாவின் பண பலத்தால், அவை வந்த வேகத்தில் மறைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தான், திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் அர்ச்சனா மீது மோசடி புகார் அளித்திருந்தார். அவரை தொடர்ந்து, தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதாக, இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பிறகுதான் இந்த விஷயம் பூதாகரமாக வெடிக்க தொடங்கியது

 

அந்தரங்க வீடியோக்களை வைத்து பலரிடமும் பணம் பறித்துவந்த அர்ச்சனாவுக்கு அவரது கணவர் ஜெகபந்த் உடந்தையாக இருந்தது போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து,  அர்ச்சனாவையும் ஜெகபந்த்தையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த மோசடி தம்பதியினரின் வீட்டில் இருந்து 4 செல்போன்கள், 2 டேப்லெட்டுகள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை போலீசார் ஆய்வு செய்தபோது ஒடிசா மாநிலத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உள்பட 25 க்கும் மேற்பட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், இந்த மோசடி வலையில் விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால், இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.