Skip to main content

தண்ணீர் எடுக்க இறங்கிய இளைஞர்; தண்டவாளத்தில் சிக்கிய பரிதாபம்

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

The young man went down to fetch water; Caught on the rail, fingers severed

 

ரயில் நிலையத்தில் தண்ணீர் எடுக்க இறங்கிய இளைஞர் ஒருவர் தவறி தண்டவாளத்தில் விழுந்ததால் கைவிரல் துண்டானது.

 

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜூ காஸ்யப் என்ற இளைஞர், சூரியவான் ரயில் நிலையத்தில் தண்ணீர் பிடிக்க ரயிலில் இருந்து கீழே இறங்கியுள்ளார். தண்ணீர் பிடித்து விட்டு மீண்டும் ரயிலில் ஏற முற்படுகையில் ரயில் புறப்பட  நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். சக்கரத்தின் அடியில் மாட்டாமல் இருக்க தண்டவாளத்திலேயே படுத்துவிட்டார். துரதிர்ஷ்டவசமாக கையின் இரு விரல்கள் துண்டான நிலையில் ரயில் சென்றதும் ரயில் நிலையத்தின் நடைபாதையில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். 

 

இதனை தொடர்ந்து இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்