Skip to main content

இதுக்கெல்லாம் ஒரு சண்டையா...! பெண்களால் போர்க்களமான ரயில்; வைரலாகும் வீடியோ 

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

Women passengers engage brawl local train mumbai

 

மும்பை மின்சார ரயிலில் இருக்கைக்காக பெண்கள் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

காலையில் தண்ணீர் பிடிக்க பைப்பில் வரிசையில் நிற்கும் பெண்களில்  வேறு யாராவது வரிசையை மீறி தண்ணீரை மாற்றி பிடித்துவிட்டால் அது பெரும் பிரச்சனையாக மாறி சண்டையில் முடியும். முதலில் இரண்டு பெண்கள் மூலம் ஆரம்பிக்கும் சண்டை,  ஒரு பெரும் பஞ்சாயத்தையே கூட்டிவிடும். இரு பெண்கள் சண்டை போட்டுக்கொள்ளும்போது, வழியில்  செல்லும் அவர்களின் உறவினர்கள் பார்த்தால்,  “ஏய் என்ன என் உறவுக்கார பெண்ணையா அடிக்கிற...” என்ற குரலுடன் சண்டையிடும் பெண்ணுக்கு ஆதரவாக களத்தில் இறங்க, அதை பார்த்த இன்னொரு பெண்ணின் உறவினர்கள் சம்பவத்திற்கு என்ட்ரி கொடுத்த பிறகு சொல்லவா வேண்டும், அப்புறம் என்ன அதகளம் தான்.  இது தமிழ்நாட்டில் என்றால் இது கொஞ்சம் அட்வான்ஸாக மாறி மும்பையில் தற்போது, ரயில் சண்டைகள் பிரபலமாகி வருகிறது. 

 

மும்பை எப்போதுமே ஒரு கூட்ட நெரிசல் மிக்க நகரம். அங்கு பெரும்பாலான மக்கள் வேறு இடத்திற்கு செல்வதற்கு அதிகம் ரயிலில் பயணம் செய்வதையே வாடிக்கையாக வைத்து வருகின்றனர். அதனால் மும்பையின் புறநகர் ரயில் எப்போதுமே கூட்டமாக இருக்கும் என்பதால் இருக்கைகளுக்காக வாய் வார்த்தையில் சண்டை வருவது வழக்கம். ஆனால் இதில் ஒரு படி மேலே சென்று மூன்று பெண்கள் ஒருவரை ஒருவர் மோசமாக தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தை அங்கு இருந்த சக பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

 

Women passengers engage brawl local train mumbai

 

இதுபோன்ற ஒரு சம்பவம் கடந்த 6 ஆம் தேதி மும்பையில் தானே - பன்வெல் புறநகர் மின்சார ரயிலில் இருக்கைக்காக பெண்கள் சண்டை போட்டுக் கொண்டனர். ஒருவரை ஒருவர் தலைமுடியைப் பிடித்தும், பாக்ஸிங் போன்ற பஞ்ச்களால் படு பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர். இதனைத் தடுக்க வந்த பெண் காவலரையும் விட்டு வைக்காத அந்தப் பெண்கள் அவரையும்,  அடித்துக் காயப்படித்தியுள்ளனர். இப்படி மாறி மாறி ரத்தம் சொட்டச் சொட்ட தாக்கிக் கொண்டதில் பெண் காவலர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரசிகர்களுக்கு தடியடி - சல்மான் கான் வீட்டில் பரபரப்பு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
police lathi charge in Salman Khan fans

ரமலான் பண்டிகை இன்று (11.04.2024) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் காலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மற்றும் தனது பிறந்தநாளின் வீட்டின் முன் கூடியிருக்கும் ரசிகர்களைச் சந்திப்பார் சல்மான் கான். அந்த வகையில் இன்று மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன்பு, ரமலான் வாழ்த்து பெற அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் கூடியிருந்தனர். அப்போது அவர்கள் ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். அவர்களால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவர்களை தடியடி நடத்தி போலீஸார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

சல்மான் கான், தற்போது ஏ.ஆர் முருகதாஸுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை சஜித் நதியாத்வாலா தயாரிக்க அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், ரமலான் நாளான இன்று படத்திற்கு சிக்கந்தர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.