Skip to main content

கருப்பு பூஞ்சை எதனால் ஏற்படுகிறது?- நிபுணர்கள் விளக்கம்! 

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

aimms chief

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோயும் தாக்கி வருகிறது. பொதுவாக நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பவர்களை தாக்கும் இந்த நோய், கரோனாவால் பாதிக்கப்பட்டு, அதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும் தாக்கி வருகிறது. இதனால் உயிரழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

 

மஹாராஷ்டிராவில் மட்டும் 52 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியாகியுள்ளனர். இந்தநிலையில் கருப்பு பூஞ்சை குறித்து எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா விளக்கமளித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கருப்பு பூஞ்சை ஒன்று புதிய நோயல்ல. ஆனால் தற்போது கரோனா பாதிப்பால் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

 

மேலும் இதுகுறித்து அவர், "கருப்பு பூஞ்சை முகம், மூக்கு, கண் அல்லது மூளை ஆகியவற்றைப் பாதிக்கும். இது பார்வை இழப்பைக் கூட ஏற்படுத்தும். நுரையீரலுக்கும் இது பரவும். கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றுவது மிக முக்கியம். பூஞ்சை மற்றும் பாக்டீரியா போன்ற கூடுதல் தொற்றுகள் தான் உயிரிழப்பை அதிகப்படுத்துகின்றன" என தெரிவித்தார்.

 

எல்.என்.ஜே.பி மருத்துவமனையின் எம்.டி. டாக்டர் சுரேஷ்குமார் கருப்பு பூஞ்சை குறித்து கூறுகையில், "ஸ்டீராய்டு பயன்பாடு குறைக்கப்பட வேண்டும். 90 க்கு மேல் ஆக்சிஜன் அளவைக் கொண்ட நோயாளிக்கு ஸ்டீராய்டு வழங்கப்பட்டால், பக்க விளைவாக கருப்பு பூஞ்சை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆரம்பத்திலேயே கருப்பு பூஞ்சை பாதிப்பை கண்டறிவது முக்கியமானதாகும். முகத்தில் சி.டி ஸ்கேன் செய்வதன் மூலம் இந்த நோய்த்தொற்றைக் கண்டுபிடிக்காலம். ஆம்போடெரிசின் என்ற மருந்தை இதற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. ஸ்டீராய்டுகளின் அதிகப்படியான பயன்பாடு அல்லது தவறான பயன்பாடு கருப்பு பூஞ்சை நோய்க்கு வழிவகுக்கிறது" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜம்முவில் எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு!

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Pm modi opens AIIMS Hospital in Jammu

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஐ.ஐ.எம், மின்சார ரயில் சேவை உள்ளிட்ட பல்லாயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று (20-02-24) திறந்து வைக்கிறார். 

எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்ததை தொடர்ந்து, மவுலானா பகுதியில் ஆசாத் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 32,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதனை தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராஜ்கோட், மங்களகிரி (ஆந்திரா), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரப்பிரதேசம், கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய இடங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். 

ஜம்மு காஷ்மீரில், பிரதமர் வருகையையொட்டி, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 227 ஏக்கர் பரப்பளவில், ரூ.1660 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.