Skip to main content

1947-ல் எந்த போர் நடந்தது? கவனத்திற்கு வந்தால் மன்னிப்பு கேட்கிறேன் - கங்கனா ரணாவத்!

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

kangana ranaut

 

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் கங்கனா ரணாவத். தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து வரும் இவர், சில நாட்களுக்கு முன் ஆங்கில ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 1947-ல் பெற்றது பிச்சை. உண்மையான சுதந்திரம் 2014ஆம் ஆண்டு கிடைத்தது" எனத் தெரிவித்தார்.

 

இதற்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ளது. கங்கனா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதையும், தேசிய விருதுகளையும் திரும்பப் பெறவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

 

இந்த நிலையில் கங்கனா ரணாவத் ஒரு புத்தகத்தின் பகுதியைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு 1947-ல் என்ன போர் நடந்தது எனக் கேள்வியெழுப்பியுள்ளதோடு, இதற்கு பதிலளித்தால் பத்மஸ்ரீ விருதைத் திரும்ப அளித்துவிட்டு, மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக கங்கனா பதிவிட்டுள்ளதாவது; எல்லா விஷயங்களும் அந்த நேர்காணலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. 1857-ல் சுதந்திரத்திற்கான முதல் கூட்டு போராட்டம் நடைபெற்றது. அதோடு சுபாஷ் சந்திரபோஸ், ராணி லக்ஷ்மிபாய் மற்றும் வீர சாவர்க்கர் போன்ற உயர்ந்தவர்கள் தியாகம் செய்தனர். 1857-ல் போர் நடந்தது எனக்கு தெரியும். ஆனால் 1947-ல் எந்த போர் நடைபெற்றது என்பது எனக்கு தெரியவில்லை. யாராவது அதை எனது கவனத்திற்கு கொண்டுவந்தால் நான் எனது பத்மஸ்ரீ விருதை திருப்பித் தருகிறேன், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இதில் எனக்கு உதவுங்கள்.

 

நான் தியாகி ராணி லக்ஷ்மி பாயின் திரைப்படத்தில் பணிபுரிந்தேன். அதற்காக 1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்தேன். தேசியவாதம் வளர்ந்தது அதோடு வலதுசாரியமும் வளர்ந்தது.  ... ஆனால் அது ஏன் திடீரென இறந்தது?. ஏன் காந்தி பகத்சிங்கை இறக்கவிட்டார். ஏன் நேதாஜி சுபாசந்திரபோஸ் கொல்லப்பட்டார். அவருக்கு ஏன் காந்திஜியின் ஆதரவு கிடைக்கவில்லை? பிரிவினைக்கோடு ஒரு வெள்ளைக்காரனால் ஏன் வரையப்பட்டது. இந்தியர்கள் ஏன் சுதந்திரத்தைக் கொண்டாடாமல், ஏன் ஒருவரை ஒருவர் கொன்றனர்?. சில விடைகளைப் பெற விரும்புகிறேன். விடைகளைப் பெற தயவு செய்து எனக்கு உதவுங்கள்.

 

2014 ஆம் ஆண்டு சுதந்திரத்தை பொறுத்தவரையில், இந்தியாவின் உணர்வும் மனசாட்சியும் விடுவிக்கப்பட்டது. இறந்த நாகரீகம் உயிரோடு சிறகடித்து வந்து, இப்போது கர்ஜனை செய்து உயர்ந்து நிற்கிறது. முதல் முறையாக ஆங்கிலம் பேசாததற்காகவோ அல்லது சிறிய நகரங்களில் இருந்து வருவதற்காகவோ அல்லது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதற்காகவோ நம்மை அவமானப்படுத்த முடியாது.  எல்லாமே ஒரே நேர்காணலில் கூறப்பட்டுள்ளன. குற்ற உணர்ச்சி உள்ளவர்கள் எரிச்சலை உணர்வார்கள், அதற்கு எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு கங்கனா பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த கருத்தும் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் விசிட் அடித்த ரஜினி!

 

rajini surprise visit kangana new film shoot

 

கங்கனா ரணாவத் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து இந்தியில் வெளியான ‘தேஜஸ்’ படமும் படுதோல்வி அடைந்தது. இதனிடையே இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எமெர்ஜென்சி படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

இந்த நிலையில் கங்கனா நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்க மாதவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ட்ரிடென்ஸ் ஆர்ட் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். சென்னையில் நடைபெற்ற இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்ட நிலையில், ரஜினி சர்ப்ரைஸாக சென்று வாழ்த்தியுள்ளார். இதனை கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து, இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.  

 

 

 

Next Story

மக்களவைத் தேர்தலில் போட்டி? - கங்கனா பதில்

 

kangana Ranaut about lok sabha election 2024

 

கங்கனா ரணாவத் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே அரசியல் குறித்தும் தனது கருத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக பாஜகவை ஆதரித்து குரல் கொடுக்கிறார். இதனிடையே சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தேஜஸ் படம் படு தோல்வியை சந்தித்தது. பல தியேட்டர்களில் கூட்டம் வராததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் உத்தரப்பிரேதேச முதல்வர், உத்தரகாண்ட் முதல்வர் உள்ளிட்ட பலருக்கு இந்தப் படத்தை சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்து போட்டுக் காண்பித்தார். படம் பார்த்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்ணீர் விட்டதாக எக்ஸ் தள பக்கத்தில் கங்கனா தெரிவித்திருந்தார். 

 

தமிழிலும் சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். அதுவும் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எமெர்ஜென்சி படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

இந்த நிலையில் குஜராத்தில் உள்ள சோமநாத் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோவிலை பற்றிய சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்தார். அப்போது அடுத்த வருடம் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "கிருஷ்ணர் அருள் புரிந்தால் போட்டியிடுவேன்” எனத் தெரிவித்தார். 

 

மேலும் "பாஜக அரசின் முயற்சியால், 600 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு இந்தியர்களாகிய நாம் இந்நாளைக் காண முடிகிறது. வெகு விமரிசையாக கோவிலை நிறுவுவோம். சனாதன தர்மத்தின் கொடி உலகம் முழுவதும் பறக்க வேண்டும்" என்றார். கங்கனா தேர்தலில் நிற்பது குறித்து கடந்த ஆண்டே பேச்சுக்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.