Skip to main content

தெரியாத எண்களில் இருந்து வீடியோ மெசேஜ் வந்தால் ஓபன் செய்ய வேண்டாம்... வாட்ஸ் அப் நிறுவனத்தின் அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை!

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களுக்கு எச்சரிக்கையுடனான அதிர்ச்சிதகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. அதனோடு வாட்ஸ் அப்பின் சமீபத்திய வெர்சனை பயனாளர்கள் டவுன்லோட் செய்து கொள்ளும்படியும் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

 

whatsapp warning to users


 

அப்படி என்னதான் அந்த எச்சரிக்கை

அதாவது முன்பின் தெரியாத எண்ணில் இருந்து ஏதேனும் வீடியோக்கள் வந்தால் அதனை பதிவிறக்கம் செய்ய கூடாது என்பதே அந்த எச்சரிக்கை ஆகும். சமீபத்தில் பெகாசஸ் என்ற மால்வேரை பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் குறிப்பிட்ட நபர்களின் வாட்ஸ்அப் தகவல்களை ஹேக் செய்ய முற்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியிருந்தது.

ஆனால் பெகாசஸ் மால்வேர் குறித்த எச்சரிக்கைகள் முடிவதற்குள் தற்பொழுது மற்றொரு மல்வேர் குறித்த அதிர்ச்சி தகவலை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டதோடு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

 

whatsapp warning to users


ஐசிஆர்டி எனப்படும் இந்தியன் கம்ப்யூட்டர் ரெஸ்பான்ஸ் டீம் வாட்ஸப்பில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை சுட்டிக் காட்டியுள்ளது. அந்த புதிய மால்வேரானது  எம்பி4 (mp4) ஃபைல் வடிவத்தில் அதாவது வீடியோ ஃபைல் வடிவத்தில் ஹேக் செய்ய முடிவெடுக்கப்படும் பயனர்களின் எண்ணிற்கு வீடியோவாக அனுப்பப்படும். இந்த வீடியோ மெசேஜை ஓபன் செய்ததும் போன் ஹேக்கரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். இதன் மூலம் அந்த நபரின் வாட்ஸ்அப் அக்கவுண்டின்  உரையாடல், புகைப்படம், போனில் உள்ள தகவல்களை திருட முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் எனப்படும் இரண்டு தளத்தினை சேர்ந்த பயனாளர்களையும் தாக்கும் என வாட்ஸ்அப் நிறுவனத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

whatsapp warning to users

 

தப்பிக்க என்னதான் செய்யவேண்டுமாம்

 

நம்மில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அநேகமானவர்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட் எண்ணிற்கு வரும் வீடியோக்களை டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷனை ஆன் செய்து வைத்திருப்பார்கள். அதாவது 'ஆட்டோமேட்டிக்  வீடியோ டவுன்லோட்  ஆப்சன்'. அப்படி வைத்திருந்தால்  நமக்கு தெரிந்த எண்ணோ தெரியாத  எண்ணோ எந்த எண்ணில் இருந்து வீடியோ வந்தாலும் ஆட்டோமேட்டிக்காக டவுன்லோட் ஆகிவிடும்.

அப்பொழுது சம்பந்தப்பட்ட பயனாளர்களுக்கு அனுப்பப்படும் அந்த மால்வேர் வீடியோவானது ஆட்டோமேட்டிக்காக நமது அனுமதி இன்றியே டவுன்லோட் ஆகிவிடும்.  இதனால் மொபைலில் இருந்து தகவல்கள் திருடப்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆட்டோமேட்டிக் வீடியோ டவுன்லோட் ஆப்ஷனை ஆப் செய்து வைக்கவேண்டும், தெரியாத எண்ணிலிருந்தோ அல்லது சந்தேகம் ஏற்படுத்தும் எண்ணிலிருந்தோ வரும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் வாட்ஸ்அப் நிறுவனத்தால் எச்சரிக்கையுடன்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபரீத இன்ஸ்டா ரீல் இளைஞர்கள் கைது; போலீசார் எச்சரிக்கை

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
nn

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தில் விபரீதமாக மண்ணுக்குள் குழிதோண்டி அதனுள் இளைஞரை தலைகீழாக புதைத்து சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார் ரஞ்சித் பாலா அவரது நண்பர்கள் சிவக்குமார், இசக்கி, ராஜா ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

'பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது' - அதிமுக முன்னாள் நிர்வாகி பேச்சுக்கு த்ரிஷா கண்டனம்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
'It is disgusting to see'-Trisha condemns the speech of ADMK ex-executive

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளை தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்த நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், தற்போது த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார். இதற்கு முன்பே நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, தனது கண்டனத்தை த்ரிஷா தெரிவித்திருந்தார். பின்னர் அது நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.